செவ்வாய், 30 அக்டோபர், 2018

சிமிலாரிட்டி சைன்ஸ்



முன்னோர் வாக்கு வேதவாக்கு


                           நம்ம வீட்டுப்  பெரியவங்க நம்மள எப்பப் பாத்தாலும் நேரா நில்லு, காலை அகட்டி உக்காராத, தலைய இப்பிடி சொறியாத, நிமிந்து நட,காலை ஆட்டாத ,  சுத்தபத்தமா இரு, அப்பிடி செய் ,இப்பிடி செய்னு நிறைய அறிவுரைகள சொல்லிட்டே இருப்பாங்க. நம்ம தோற்றத்துலயும் நடவடிக்கைகள்லயும் பாக்குறதுக்கு நல்லா இருக்கனும்ங்கறது தான் அவுங்களோட தியரி. கொஞ்ச நாளைக்கு அத கேக்குற நாம  ஒரு கட்டத்துல காதுலயே வாங்கிக்குறதில்ல அவுங்க பேச்ச.

                       நாம வளந்த பெறகு கூட அவுங்க எதுக்கு அப்பிடி சொன்னாங்கனு  என்னைக்க்காது  யோசிச்சு பாத்துருப்போமா? யோசிக்குற பழக்கமே நம்மகிட்ட கெடயாதே..இருந்திருந்தா நாம இப்பிடி இருப்போமா?
ஒரு மனுசன் எப்பிடிப்பட்டவன்,அவன் குணம் என்னனு நம்மளோட நடவடிக்கைகளை வச்சே சொல்லிரலாம்.. நம்ம நடக்குற ஸ்டைலு, நிக்குற ஸ்டைலு, நம்ம அறை சுத்தமா இருக்கா இல்ல அங்கங்க துணிமணியா இருக்கா ,நம்ம உடம்ப சுத்தமா வச்சுருக்கமா இப்பிடி  நெறய சொல்லலாம். இதெல்லாம் வச்சே நம்மள மத்தவங்க எளிதா எடை போட்டுருவாங்க..எப்பிடி நம்ம கையெழுத்த வச்சு நம்ம குணநலன்கள சொல்ல முடியுமோ அதே மாரி தான் இதுவும்.

                          அதே மாரிதான்  நம்மகிட்ட சில குணங்கள் இருக்கும் அத வச்சே நாம எப்பிடி கஸ்டப்படப் போறோம்னு கூட நம்ம வீட்டுலலாம் முன்கூட்டியே கணிச்சுருவாங்க..உதாரணமா சில பேரு எதுக்கெடுத்தாலும் முந்திரிக் கொட்டைகெனக்கா முந்திகிட்டே இருப்பான் எல்லா விசயத்துலயும். ஸ்கூல்ல படிக்குறப்ப பக்கத்து பையன்கிட்ட கேட்ட கேள்விக்கு நாம எந்திருச்சு பதில் சொல்றது,[நமக்கு எல்லாம் தெரியும்ங்ற கர்வம்] நம்ம கிட்ட கேக்காதப்ப போய் வாலண்டியரா உதவி பண்ணி சிக்கல்ல மாட்டிக்குறது .. [நாம  தாராளமான் மனசுக்காராங்கனு உலகத்துக்கு காட்டுறதா நெனப்பு நம்மளுக்கு]..நம்ம வீட்டுலயும் தலையா அடிச்சிக்குவாங்க.  உன்னக் கொஞ்சம் மாத்திக்க்கோ ...இல்லனா சிரமப்படுவனு...அதே மாரி நாமளும் ஏதாவது ஒரு சிக்கல்ல கரெக்டாம  மாட்டுவோம்.

                   இதுக்கெல்லாம் என்ன காரணம் இருக்கும்? இந்த உலகத்துல எதுவுமே தானா நடக்குறதில்ல..எல்லா நிகழ்வுகளுமே ஒருவித சங்கிலித் தொடர் மாரி தான்... ஒண்ணுக்குள்ள ஒண்ணு கனெக்ட்  ஆகிருக்கு..இதுக்கு பட்டர்ஃப்ளை எஃபெக்ட் னு பேரு குடுத்தாரு அமெரிக்க வானிலை ஆராய்ச்சியாளர் எட்வர்ட் நார்டன் லாரென்ஸ்.
                ஒரு இடத்துல வண்ணத்துப் பூச்சிகள் ஏராளமா தங்களோட சிறகுகளை வேகமா துடிக்க துடிக்க ஆட்டிக்கிட்டு இருந்தா பூமியோட ஏதாவது ஒரு மூலையில சூறாவளி உருவாகி வந்துகிட்டு இருக்குனு அவர் நிருபிச்சார்.

                எங்க ஊரு பக்கம்லாம் உள்ளங்கை அரிச்சா பணம் வரும்னும், காக்கா கத்துனா வீட்டுக்கு விருந்தாளி வருவாங்கனும், வலது கண்ணு துடிச்சா கெட்டது நடக்கும்னு சொல்லுவாங்க... சுத்தம் சோறு போடும்னு சும்மாவா நம்ம முன்னோர்கள் சொன்னாங்க. எதுலயாது சாஞ்சு நின்னா அப்பிடி நிக்காதனு சொல்றது எதுக்கு? காலம்பூரா யாராயாது சார்ந்தே நிக்க வேண்டி வரும்ங்க்றதுக்காகத்தான். இந்த மாரியான விசயங்களுமே இந்த பட்டர்ஃப்ளை எஃபெக்ட்டோட தொடர்பு உடையதுதான். இத சிமிலாரிட்டி சைன்ஸ் கூட சொல்லுவாங்க சில பேரு

                ஒரு விசயத்துல நாம எப்பிடி நடந்துக்குவோம்ங்க்றத் சின்ன சின்ன விசயங்கள்ல நாம கண்டிப்பா  நம்மளையும் அறியாம வெளிப்படுத்துவோம். சின்னச் சின்ன செயல்கள் நம்மை சில சமயம் காட்டிக் குடுக்கும். இல்லைனா நாம யாருனு நிருபிக்கும்.  உதாரணத்துக்கு யேசுவோட வாழ்க்கைல இருந்தே சொல்லலாம்..யூதாஸ் யேசுவின் கைகள்ல முத்தமிட்டு அவர காட்டிக் குடுத்தான்.  இந்தச்  சின்ன காரியத்துனால எவ்வளவு பெரிய விளைவு நடந்த்துச்சுனு நமக்கு  நல்லாவே தெரியும்.
                 
                        நம்மகிட்ட இருக்கும் சின்னச் சின்ன அசைவுகள், பழக்கங்கள்னால நமக்கு நாமே நல்லது இல்லனா கெட்ட விளைவுகள ஏற்படுத்திக்குறோம். அதுனால தான் நம்மள பெத்தவங்க நமக்கு திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டே இருக்குறாங்க.. நாம கஸ்டப்படக்கூடாதுனு அவுங்களத் தவிர வேற யாரு நெனப்பாங்க..
                    இந்த மாரி எதிர் விளைவுகளை தவிர்க்கனும்னா நாம கொஞ்சம் நம்மள மாத்திக்கிட்டா போதும்.. சின்னச் சின்ன விசயங்கள கூர்ந்து கவனிக்கனும்.கொஞ்சம் விழிப்புணர்வோடு இருக்கனும். நிகழ்கால சிமிலாரிட்டிகள் தான் வருங்காலத்த காட்டுற கண்ணாடி. பெரிய பெரிய விசயங்கள தீர்மானிக்குற சின்னச் சின்ன விசயங்கள்ள  கவனமா இருந்தா போதும்...வெற்றி நம்மளத்  தேடி வரும். நாம வெற்றியடைவோமா இல்லயாங்கறத  இந்த சிமிலாரிட்டிகள வச்சே சொல்லிரலாம்.

                     சின்னச் சின்ன விசயங்கள் தான் பெரிய பெரிய விளைவுகள ஏற்படுத்தும்.. ஆபிரகாம் லிங்கன் ஒரு தடவ பிரச்சாரத்துக்கு போனப்ப ஒரு சிறுமி அவருக்கு , நீங்க தாடி வச்சா இன்னும் அழகா இருப்பீங்க... ஜனாதிபதியாகலாம்னு  ஒரு கடிதம் எழுதினா .. அவரும் அந்த சிறுமி  சொன்னத மதிச்சு தாடி வச்சாரு... ஜனாதிபதியானாரு. அவரு தாடி வச்சதுனால தான் அவரு தேர்தல்ல ஜெயிச்சாருனு அர்த்தம் இல்ல...தாடி அவர் தோற்றத்த கம்பீரமாக்குச்சு...மக்களுக்கும்  அவர் மேல நம்பிக்கை அதிகமாச்சு... அதுக்கு அவரது கம்பீரமான தோற்றம் தான் காரணம்...லிங்கன் இடத்துல நாம இருந்தா இப்பிடி ஒரு சிறுமியோட கருத்துக்கு மதிப்பு குடுப்போமா? யோசிப்போம்..

                     இந்த சிமிலாரிட்டி சைன்ஸ் தெரிஞ்சாப் போதும்... நம்ம வாழ்க்கைய சரி பண்ணிரலாம். நம்ம தோற்றத்துல நம்ம நடவடிக்கைல சின்னச் சின்னச் மாற்றங்கள் செய்யுறதுனால நமக்கு வெற்றி கெடைக்கும்னா அத ஏன் நாம செய்யக்கூடாது?  எப்பவும், எதுக்கெடுத்தாலும் பகுத்தறிவு பேசிக்கிட்டு, வீண் விவாதங்கள்ல வாழ்க்கைய கடத்திக்கிட்டு இருக்குறதுக்கு பதிலா ஒரு தடவ வாழ்ந்து தான் பாக்கலாமே...முயற்சி எடுத்து இத கத்துக்குவோம்.
நம்மளோட சிறு சிறு முயற்சிகள் கண்டிப்பா ஒரு நாள் நம்மள சிகரத்தோட உச்சிக்கே கொண்டு போகும்..\



ஞாயிறு, 21 அக்டோபர், 2018

மனம்...சொல்...செயல்...ஸ்மார்ட்வொர்க்...

ஸ்மார்ட்வொர்க்


                                இடியாப்பச் சிக்கல் மாதிரி உணர்வுச் சிக்கல்ல சிக்காத ஆளே இல்ல இந்த உலகத்துல.  அம்பியாவும், ரெமோவாவும் அந்நியனாவும் நமக்குள்ள ஏகப்பட்ட காட்சிகள்...விடாம ஓடிட்டே இருக்கு..நாமளும்  மாரி மாரி  அந்த அந்த கேரக்டருக்கு உயிர் குடுத்து குடுத்து, சீக்கிரமே டயர்டாகிற்றோம்.

                               உடம்ப விட மனசு சீக்கிரமே களச்சுப் போறதுனால, எதப் பாத்தாலும் எரிச்சல்..ஒரு வெறுமை...ஒருவித சலிப்பு...ஒரு மந்த தன்மை...நம்மள  தொரத்துது... இதுல இருந்தெல்லாம் விடுபடனும்னு தான் நாமளும் ஆசபடுறோம்...பட்.. ஆசபடுறதோடயே நிறுத்திக்குறோம்..... மாயமந்திரத்துல யாராது சரி பண்ணிக்  குடுத்தா நமக்கு சந்தோசம்...ஆனா, அதுக்கான   முயற்சிகளோ, செயல்களோ நாம செய்யமாட்டோம். அந்த அளவுக்கு சோம்பேறிகளாகிட்டோம் .
                               இதெல்லாம் பத்தாதுனு, கோவம், பொறாம, அழுகை, சோகம்,  அப்பிடியிப்பிடினு ஏகப்பட்ட எதிர்மறை உணர்வுகளின் குவியலா வேற இருக்கோம்..இவ்வளவு குப்பைகள வச்ச்சுக்கிட்டு நம்மளால எப்பிடி நம்ம வாழ்க்கைல ஜெயிக்க முடியும்?
                              ஸ்மார்ட் வொர்க் பண்ணனும்னு நினைக்குறோம். நம்மளோட மனக்குப்பைகளை தூக்கியெறியுறதும் ஒரு ஸ்மார்ட் வொர்க் தான்னு புரியாம, பாரங்களைத் தூக்கிக்கிட்டே மலையேறுறோம். அதுனால தான் சீக்கிரமாவே களச்சும் போய்றோம்.
                               எதிர்மறை உணர்வுச் சிக்கல்ல இருந்து வெளியே வர்றதுக்கு நிறைய வழிகள்  இருக்கு....அதுல ஒரு வழியை இப்ப பாக்கலாம்..நம்ம மனசுல தோணுற எல்லாத்தையும் ஒரு காகிதத்துல  எழுதிறனும். உணர்வுகள பேப்பர்ல எழுத எழுத, நம்ம மனநிலைல கொஞ்ச கொஞ்சமா மாற்றங்கள் வர ஆரமிச்சுரும்...கடைசில எதிர்மறை எண்ணங்கள் ,கட்டெறும்பான கழுதை மாரி , இருக்குற இடம் தெரியாம காணாமாப் போயிரும்.
                             பொதுவா நம்ம  மனசுல வர்ற எண்ணங்கள், இந்த வழியா  வந்துட்டு அந்த வழியா உடனே போயிரும். ஆனா, நாம தான் அத போகவிடாம,  விடாப்பிடியா பிடிச்சு தொங்கிக்கிட்டு இருப்போம். கடந்து போற இரயிலுக்கு டாட்டா காட்ற மாதிரி, எண்ணங்களையும், கடந்து போகவிட்டுட்டா , எந்த உணர்வுகளுமே  நம்மள பெருசா பாதிக்காது..அடுத்து என்னனு சிந்திக்க மனசு தயாராகிரும். எண்ணங்கள்  பின்னாடி போறதுனால தான் நம்ம மனசு எப்பப் பாத்தாலும் தம் பிரியாணி மாரி சூடாவே இருக்கு...
                             அடுத்து  சுயப்பேச்சு....  இந்த முறையிலயும் , நம்ம மனசுக்கு கடிவாளம் போடலாம்..அது எப்படினா , எப்பலாம் நமக்கு மனசோர்வு வருதோ ....எப்பலாம் எதிர்மறையா இருக்குறோமோ... எப்பலாம் சாஞ்சுக்க தோள் தேடுறோமோ... அப்பலாம் நம்மள நாமளே தட்டிக்குடுக்குற மாரி நமக்குள்ள பேசுனாப் போதும்.. நான் கண்டிப்பா ஜெயிப்பேன்...என்னால் முடியும்...என் வாழ்க்கைய நான்  உருவாக்குறேன்...என்னால எளிதா பணம் சம்பாதிக்கமுடியும். என் வாழ்க்கை  என் உரிமைனு நமக்கு நாமே உற்சாகமா பேசிக்கிட்டு இருந்தா போதும்...நம்ம வார்த்தைகள மனசு நம்ப ஆரமிச்சுரும்..பிறகு தான் நம்புறத அப்பிடியே உருவாக்கத் தொடங்கிரும்.. இந்த ஸ்மார்ட் வொர்க் நம்ம வேலைய பாதியா கொறச்சுரும்.
                 நம்ம மனம் சொல் செயல் மூன்றும் ஒரு நேர்க்கோட்டுல வந்துட்டா  வானத்த கூட விலை பேசலாம். சின்னச் சின்ன ஸ்டெப்ஸ் தான் நம்மள  மலை உச்சிக்கு கூட்டிக்கிட்டு போகும்..  சின்னச் சின்ன செயல்கள்  செய்யுறப்ப நமக்கு சலிப்பு வராது,,,மலைப்பு தோணாது..அதுக்கு பதிலா, மனசு மகிழ்ச்சியடையும்..சின்னச் சின்ன வெற்றிகள் நமக்கு  உற்சாகம் தரும்.. நம்மாளயும் முடியும்ங்ற நேர்மறை எண்ணம் நம்மள எப்பவும் புத்துணர்ச்சியோடயே வச்சிருக்கும்...இந்த மனநிலை நமக்கு வெற்றியை எளிதாக்கிரும். அதுனால சின்னச் சின்ன செயல்களை இன்னைக்கே செய்யத் தொடங்குவோம்...அர்த்தமுள்ள வாழ்வு வாழ்வோம்...

புது வருடம்...புது வசந்தம்...புது சபதங்கள்.

                புது வருசம்னாலே  நிறைய தீர்மானங்கள் எடுத்துக்கனும்ங்ற சம்பிரதாயத்த யாரு உருவாக்குனதுனு தெரில..வருசாவருசம் புதுப்புது தீர்மா...