வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

மன்னன் மயங்கும் மல்லிகையின் பெருமைகளும் பலன்களும்

மல்லிகை

மலர்களின் அரசி மல்லிகை

                       செந்தமிழ் நாட்டு தமிழச்சிகளின் மனம் கவர்ந்த மலர் மல்லிகை.. அதன் உருவம், நிறம், மணம் பெண்களை  மட்டுமல்ல ஆண்களையும்  கவர்ந்திழுக்கிறது. அதனால் தான் தமிழ்க் கவிஞர்களின்  காதலிகள் மல்லிகையைச் சூடியே வளைய வர்றாங்க. வெள்ளவெளேர்னு குண்டு குண்டா இருக்குறதுனால இம்மலருக்கு இந்தப்பெயர் வந்திருக்கலாம். தமிழில் மல்லி என்றால்,பருத்தது, உருண்டது, தடித்தது என்று பொருள்.
மல்லிகைல கிட்டத்தட்ட இருநூறு வகைகள் இருக்குது. அதுல  காட்டுமல்லிகை, குண்டு மல்லி, இருவாச்சி, அடுக்கு மல்லி  ,கஸ்தூரி மல்லி, ஊசிமல்லி, ஆராதனா போன்ற  இனங்கள் பரவலா இந்தியாவில் பயிரிடப்பட்டு வருகிறது. 


                 இந்தப் பூக்கள்  இந்தியா இலங்கை,தாய்லாந்து போன்ற நாடுகள்ல அதிகமாக பயிரிடப்படுகிறது. தமிழ்க் கலாச்சாரம் எங்கெல்லாம் பரவியிருக்கோ அங்கெல்லாம் மல்லிகையின் உபயோகம் இருக்கு. பாண்டியர் காலத்துல இருந்து இன்னைக்கு வரைக்கும் தமிழ்ப் பெண்கள் மல்லிகையை தலையில் சூடும் வழக்கம் இருந்துக்கிட்டு இருக்கு. வீட்டில் நடக்கும் நல்ல காரியங்களிலும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளிலும் குண்டு மல்லிக்கே  முதல் மரியாதை. தமிழர்களின் தினசரி வாழ்க்கையிலும்  அவர்களது வழிபாட்டு முறையிலும் மல்லிகை முக்கியமான இடத்தைப் பிடிச்சிருக்கு. ரோஜாவோ, முல்லையோ,கனகாம்பரமோ மல்லிகையின் அருகில் கூட வரமுடிந்ததில்லை.
               தமிழ்நாட்ல , மதுரையில் மட்டுமே  அதிக அளவில் பயிராகிறது. மதுரை மல்லினா, மல்லிகையே பெருமை கொள்ளும் அளவிற்க்கு பெருமை பெற்றது மதுரை மல்லி.  இதன் நிறமும் மணமும் அருகில் இருப்பவர்களை  மிக எளிதாக ஈர்த்துவிடுகிறது.


             ஆசாமிகளுக்கு மட்டுமல்ல  சாமிகளுக்கும் மல்லிகை மீது ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. அதனால் தான் பெரும்பாலான கோயில்களில் மல்லிகையை மாலையாகக் கட்டி அணிவிக்கின்றனர் . சாமிய மல்லிகைப் பூவைக் குடுத்து ,ஈசியா கரெக்ட் பண்ணிறலாம்ங்ற  நெனப்பு தான் காரணம் . வேற ஒண்ணும் இல்ல.  பூவைக் குடுத்து பொண்ணுகள தான் கரெக்ட்  பண்ணனுமா என்ன?
             இப்பூவை தலையில் வைத்துக் கொண்டு யாராது நம்மள தாண்டிப் போனாலே மணம் கும்முனு அடிக்கும்.    பத்து அடி தள்ளி நின்றால் கூட அந்த வாசம் நம்மளப்  பிடிச்சு இழுக்கும்.
                  மெட்ராஸ் மல்லினு ஒரு வகை மல்லி இருக்கு. குண்டு மல்லிக்கு பதிலாக சில சமயம் விசேச நிகழ்ச்சிகள்ல உபயோகப்படுத்தப் படுகிறது. இத சில இடங்களில் காட்டு மல்லினு சொல்லுவாங்க. இதுல மல்லிக்குரிய வாசம் சுத்தமா இருக்காது. இத வைக்கிறதும் ஒண்ணுதான்...வைக்காததும் ஒண்ணுதான்.
               அடுக்குமல்லி ....பேருக்கேத்தமாரி இரண்டு அடுக்கா இருக்கும்.  இதுவும் வாசத்துல குண்டு மல்லிக்கு இணையா இருக்கும். மலர்ந்த ஒரு அடுக்குமல்லி பாக்குறதுக்கு சிறு குழந்தையின் விரிந்த கையைப் போல் இருக்கும் .தும்பை நிறத்துல இந்தப் பூ மலர்ந்து இருக்குறப்ப மணம் வீசி ஊரையே அழைக்கும்.  அவ்வளவு நறுமணம்....இருந்தாலும் குண்டு மல்லி அளவிற்கு இத யாரும் தலையில் சூடிக் கொள்வதில்ல.
 
பராமரிப்பு:
        மல்லிகைக் கன்றுகளை நட்ட  ஆறு மாசத்துல இருந்து பூக்கள் பூக்க ஆரம்பிக்கும்.. ஒரு ஆளு உசரத்துக்கு  புதர் மாதிரி வளர்ந்து நிக்குறப்ப  பச்சைப் பசேல்னு பாக்க கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும் . ஒரு தடவ வச்சோம்னா இந்தச் செடி குறைந்தது பத்து ஆண்டுகள் வரை நல்ல மகசூலக்  குடுக்கும். சரியான முறையில இயற்கை உரமிட்டு, பராமரிச்சோம்னா  நல்ல லாபம் தரக்கூடிய ஒரு தொழில் இது .ஒரு வருசத்துல குறைந்தது ஒரு லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும் .இதற்கான செலவுகளும் கம்மிதான். வருசத்துக்கு இரண்டு தடவயாது கவாத்து செஞ்சாப் போதும். நிலையான வருமானம் நிச்சயம். ஆரம்பநிலையில, பத்து அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர்  பாச்சுனாப் போதும். அதுக்கு அப்புறம் ஆறு மாதங்களுக்கு தண்ணீர் இல்லனாக் கூடப் பரவாயில்ல.. செடி தாக்குப் பிடிச்சுரும். களரி மண் மற்றும் உவர் மண் தவிர மத்த எல்லா  வகை மண்லயும்  நல்லா வளரும்  தன்மையுடையது மல்லி.  மதுரைல விளையுற மல்லி,பல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.


        திருமண காலங்கள்ல மதுர மல்லியோட விலை வானத்த தொட்ரும். விவசாயிகளுக்கும் இதனால் நல்ல விலைக்கு விற்க முடியும். பூவின் அளவ பொறுத்தும் விலை கூடிக் குறையும் .கிலோ இரண்டாயிரம் ரூபாய்க்கு கூட போன நாட்களுமுண்டு.   மதுர மல்லியில் தயாரிக்கப்படும் சென்ட்கள்  நல்ல வாசம் தரும்.
மருத்துவ பலன்கள்:
      மருத்துவத்துக்கு அந்தக் காலத்துல இருந்தே  மல்லிகைப் பூவை  பயன்படுத்திட்டு வந்துருக்காங்க. இந்தப் பூவிலிருந்து எடுக்குற  எண்ணெய் உடல் உபாதைகளுக்கு நல்ல மருந்தாகும். மன அழுத்தம் உள்ள பெண்கள்  மல்லிகப்பூவை  தலைநிறைய  வச்சிக்கிட்டாப் போதும். தானாவே மன அழுத்தம் குறையும். மல்லிகைப் பூ தைலம் டிப்ரஷ்ன், ஸ்ட்ரெஸ், ஆங்சைட்டி, ஃபெடிக் ,மெனோபாஸ் போன்ற நோய்களுக்கு இயற்கையாகவே நல்ல  பலன் தருகிறது.
           மல்லிகைப் பூ இதழ்களை கொதிக்க வைத்து,  அந்த நீரைப் பருகி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் அழிந்துவிடும். இந்தப் பூக்களை நிழலில் உலர்த்தி, பொடி செய்து தண்ணீரோடு கலந்து சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்துவிடும். வாழைத்தண்டு சாறு குடிக்கப் பிடிக்காதவர்கள் இதனை முயற்சி செய்து பாக்கலாம். மல்லிகைப் பூ தண்ணீர் ,வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண்களை சரி செய்யும். தினமும் சில மல்லிகைப் பூக்களை உண்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். அரைத்த மல்லிகைப் பூ,வீக்கம் மற்றும் சுளுக்குக்கு நல்ல மருந்தாகும்.மல்லிகைத் தைலத்தை தடவி குளித்து வந்தால் உடல் குளிர்ச்சியடையும், உடல் வலி நீங்கும்.
        இது போன்ற இயற்க்கை மருத்துவ முறைகளை தெரிந்து வைத்துக் கொண்டால் நமக்கு நன்மையே விளையும். பக்க விளைவு ஏற்படுத்தும் ஆங்கில மருந்துகளை விட நமது பாரம்பரிய மருத்துவம் மிகச் சிறந்தது. உடல் நலனுக்கும் தீங்கு எதுவும் இல்லாத மருத்துவ முறைகளைப் பின்பற்றி நம் ஆரோக்கியம் காப்போம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புது வருடம்...புது வசந்தம்...புது சபதங்கள்.

                புது வருசம்னாலே  நிறைய தீர்மானங்கள் எடுத்துக்கனும்ங்ற சம்பிரதாயத்த யாரு உருவாக்குனதுனு தெரில..வருசாவருசம் புதுப்புது தீர்மா...