திங்கள், 30 ஜூலை, 2018

மொபைல் செயலிகள்

செயலிகள்


புரியும்படிச் சொல்வதென்றால்  apps..ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தும்  எல்லோரையும் அடிமைபடுத்தி வைத்திருக்கும்   ஒரு நவீன டெக்னாலஜி .நாளொரு மேனியாய் வளர்ந்து கொண்டுவரும் டெக்னாலஜி அரக்கன். தன் பிடிக்குள் சிக்கியவர்களின் நேரத்தை மகிழ்ச்சியாக உண்ணும் அரக்கன்.
மொபைல் பயன்படுத்துபவர்களில் எண்பது சதவீத மக்கள் ஸ்மார்ட்ஃபோன் உபயோகிக்கிறார்கள். இந்த மொபைல்கள் குறிப்பிட்ட சில இயங்குதளங்களில் இயங்குகின்றன .விண்டோஸ்.ஆண்ட்ராய்ட்,ஆப்பிள் போன்றவை அவற்றுள் சில...இந்த எல்லா இயங்குதளங்களும் தங்களுக்கென மொபைல் செயலிகளை உருவாக்கி,வாடிக்கையாளர்களை ஈர்க்கத் தொடங்கின .ஒவ்வொரு மாடல் மொபைலிலும் புதுப்புது செயலிகளைச் சேர்த்துத்  தந்து கொண்டிருக்கின்றன.. அது மட்டுமன்றி,வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான செயலிகளை  தாங்களே தரவிறக்கம் செய்து கொள்ளும் வண்ணம்  ஆயிரக்கணக்கான செயலிகள் அடங்கிய apps stores மொபைலில் தருகின்றன.

இண்டர்நெட்  கனெக்சன் இருந்தால் போதும்..தேவையான ,தேவையில்லாத செயலிகள் அனைத்தையும் இலவசமாக  தரவிறக்கம் செய்து கொள்ளமுடியும்.  குழந்தைகளுக்கான் கேம்ஸ் செயலிகள் எண்ணிக்கையிலடங்கா அளவிற்கு இங்கே கிடைக்கின்றன.  இலவசம் என்பதாலயே  தேவையில்லாத செயலிகளையும் பெரும்பாலானோர் டவுண்லோட்  செய்கின்றனர்.   புத்தகப்பிரியர்களுக்கு இந்த இலவச தரவிறக்கச்செயலிகள் ஒரு வரப்பிரசாதமே.. எல்லா மொழி நூல்களையும் இருந்த இடத்திலிருந்தே வாசிக்கமுடிகிறது .செய்திகளை சுடச்சுட, உடனுக்குடன் அளிப்பதற்கு, முதன்மை செய்தித்தாள்களின் செயலிகள்  உதவிகரமாக இருக்கின்றது.

            வங்கிகளின்  தனிப்பட்ட வங்கி செயலிகள்   தங்கள் வாடிக்கையாளர்களை எளிதில் ஈர்க்கின்றன. ஆன்லைன் பேங்கிங் மூலம் வாடிக்கையாளர்கள் எளிதில் பணப்பரிமாற்றம் செய்து கொள்ளமுடிகிறது.  வங்கிக் கணக்கை சரி பார்த்துக் கொள்ளமுடிகிறது.


             குறைக்க ஒரு செயலி, எடை கூட்ட ஒரு செயலி, ஆடை ஆபரணங்கள் ,விளையாட்டு பொருள்கள்,  மளிகைப் பொருள்கள், வீட்டுக்குத் தேவையான பொருள்கள், பயண டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள ,தங்கும் இடங்களை முன்கூட்டியே பதிவு செய்ய, இன்னும் என்னவெல்லாம் நமது ஆசையோ அவற்றையெல்லாம் நிறைவேற்றிக் கொள்ள செயலிகள் என்று,  உலகமே இன்று செயலிகளால் தான் சுற்றுகிறது.

        இந்த செயலிகள் நமது வேலைகளை குறைத்தாலும் இவற்றால் 90%தீமையே விளைகிறது.. தொடர்ந்து மொபைல் உபயோகிப்பதால் உடல்நலம் கெடுகிறது.  கண் பார்வை கெடுகிறது .தலைவலி  போன்ற உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன.
குறிப்பாக உணவு சம்மந்தப்பட்ட செயலிகள்... வீட்டில் சமையல் செய்து,  செய்து சலிப்படைந்த இல்லத்தரசிகளுக்கும்,சமைக்கத் தெரியாத ஆண்களுக்கும் இந்த செயலிகள் எவ்வளவுக்கெவ்வளவு உதவிகரமாக இருக்கின்றதோ அந்த அளவுக்கு தீமைகளும் உண்டு.  இந்த வகை செயலிகளில் மரபு வகை உணவுகள்  கிடைப்பதில்லை..  நமது சூழலுக்கு ஒத்துவராத, உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய உணவுகளையே பெரும்பாலும் இந்த செயலிகள் மூலம் பெற முடிகிறது. 


         இவையெல்லாவற்றையும் விட முக்கியமான ஒரு தீமை என்னவென்றால் லொகேசன் ட்ரேப்..  அதாவது இந்த செயலிகள் வாடிக்கையாளார்களை ஈர்ப்பதற்க்காக அவர்களிருக்கும் இடங்களின் தகவல்களை முன்கூட்டியே அளிப்பதற்க்காக , நம்மிடம் இந்த செயலிகள் மூலம் இருப்பிடத்தை உபயோகப்படுதிக்கொள்ள அனுமதி கேட்கின்றன. நாமளும் அதன் காரணம் புரியாமல், ஓகே என்று அனுமதி குடுத்துவிடுகிறோம். இதன் மூலம் நம்மை கண்காணிக்கும் ஒற்று வேலையைத் தொடங்கிவிடுகின்றன
             இந்த செயலிகள். இதனால் நமது,ப்ரைவசி  குறைந்துகொண்டே போகிறது.. நாம் கழிவறைக்குச் சென்றாலும் நம்மை கண்காணிக்கின்றன இந்த செயலிகள். நம்மையும்  அறியாமல் நம்மைப் பற்றிய குறிப்புகள், தகவல்கள் திருடப்பட நாமும் ஒரு காரணியாகிவிடுகிறோம். நமது கவனக் குறைவும் சோம்பேறித்தனமும்  நமது அலட்சியப்போக்கும் நமக்கு இழப்பையே  அதிகம் தருகிறது  இந்தச் செயலிகள்.  மனிதன் பணத்திற்கு அடிமையாகி  இருந்த நிலை மாறி  இன்று கருவிகளுக்கும் டெக்னாலஜிகளுக்கும் அடிமையாகிக் கிடக்கிறான். இதனால் நாம் தூக்கத்தை இழக்கிறோம், உறவுகளை இழக்கிறோம், உடல்நலத்தை இழக்கிறோம், கஷ்டப்பட்டு உழைத்து ஈட்டிய பணத்தை இழக்கிறோம்.

       

வெள்ளி, 27 ஜூலை, 2018

சமூகவலைதளங்களின் சாபங்கள்

இணையம்


international network  என்பதன் சுருக்கமே internet.  அதாவது பல கணினிகளை ஒரு மையக் கணினியோடு இணைத்து செயல்படுத்துதல். தமிழில் சொல்வதென்றால் இணையம். 1990களில் பரவலாக பொதுமக்களின் கவனத்தை ஈர்த்த இணையம், முதலில அமெரிக்க இராணுவத்துறையில் தகவல் பரிமாற்றத்திற்க்காகப்  பயன்படுத்தப்பட்டது.  அமெரிக்காவின் நான்கு மாநிலங்களில்  செயல்பட்டு வந்த கணினிப் பிணையங்களை  இணைத்து ஆர்ப்பா நெட் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.  இப்போது செயல்பாட்டில் உள்ள இணையத்தின் முன்னோடி  இந்த அமைப்பே ஆகும். ஆர்ப்பாநெட்டில் சேமித்து  வைத்துள்ள தகவல்களை அமெரிக்காவின் எந்த மூலையிலிருந்தும்  கணினித் தொடர்பு மூலம் பெறமுடியும் என்று நிருபிக்கப்பட்டது. பிறகு மெல்ல மெல்ல  அரசின் மற்ற துறைகள், பல்கலைகழகங்கள், ஆராய்ச்சிக்கூடங்கள் இந்த ஆர்ப்பாநெட்டோடு இணைக்கப்பட்டது.  1990ல் ஆர்ப்பாநெட் மறைந்து என் எஸ் எஃப்நெட்டுடன் எல்லாக் கணினி பிணையங்களூம் இணைக்கப்பட்டன . அரசும் அரசுத்துறை நிறுவனங்களும் ஆராய்ச்சிக்கூடங்களும் தம் சொந்த பயன்பாட்டிற்க்காகப் பயன்படுத்தி வந்த பிணையத்தை வருங்காலங்களில் பொதுமக்களும் பயன்படுத்திட இந்த என் எஸ் எஃப் வழிவகுத்தது.

இணைய வளர்ச்சியின் வீழ்ச்சி

இதற்க்குப்  பிறகு இணையத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் நிகழ்ந்தது. பட்டி தொட்டிகளிளெல்லாம் பரவ ஆரம்பித்தது.  படிக்காதவர்கள் கூட இன்று மிக எளிதாக இணையத்தை பயன்படுத்தமுடிகிறது.  அதற்க்கு முக்கியமான காரணம்  அலைபேசிக் கருவித் துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய வளர்ச்சியே.
ஒருபக்கம் இணைய வளர்ச்சி அபரிதமாக இருந்தாலும் மறுபக்கம் நாம் இழந்து கொண்டிருப்பவைகளும் அதிகமாகிக் கொண்டே இருப்பது வருத்தத்திற்க்குரியதே. சுயகட்டுப்பாடு, சுய ஒழுக்கம், உடனிருப்பவர்களோடு சுக துக்கங்கள் பகிர்தல்,  ஊர் சுற்றுதல், மகிழ்ச்சியாக இருத்தல் , உலகை உணர்தல், குடும்பத்தோடு கூடி இருத்தல், ஓடியாடி விளையாடுதல், நூல் வாசித்தல், ஒருவர்க்கொருவர்  கலந்தாலோசித்தல் , உதவி செய்தல் என்ற இழப்புகளின் பட்டியல் சொல்லிக்கொண்டே போகலாம்.

                   உடனிருக்கும்  மனிதர்களின் உணர்வுகள் கண்டுகொள்ளப்படாமலேயே போவதால்  மனிதர்களுக்கிடையே விலகி இருக்கும் மனப்பான்மை பெருகிக்கொண்டே போகிறது. பொறுமையற்ற நிலை, தான் தனது என்ற மனநிலை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது.  அலைபேசியும் இணையமும் இருந்தால் போதும்..உலகமே நம் கையில் என்று பெருமிதம்  கொள்ளும் நாம்,  நம்மோடு இருக்கும் சகமனிதர்களைப்  பொருட்படுத்துவதேயில்லை. மனிதர்களிடமிருந்து விலகி, கருவிகளுக்கு அடிமையாகிக் கொண்டே இருக்கிறோம். குறிப்பாக,
சமூக வலைதளங்களின் அபார வளர்ச்சி நம்மை முழுதும் அடிமைப்படுத்திவிட்டது என்றே சொல்லவேண்டும். ட்விட்டர், வாட்ஸப், ஃபேஸ்புக்  ,ஸ்கைப் ,டின்டர் போன்று நூற்றுக்கணக்கான சமூகவலைதளங்கள் ஒரு மனிதனை எவ்வளவு கெடுக்கமுடியுமோ அவ்வளவு  கெடுத்துக் கொண்டிருக்கின்றன. மனிதனின் சிந்திக்கும் தன்மையை முற்றிலும் செயலிழக்கச் செய்கின்றன  இந்த சமூக வலைதளங்கள்.
         தகவல் பரிமாற்றம் எளிதாக இருப்பதால், எதைப் பகிரலாம், எதைப் பகிரக்கூடாது என்ற உணர்வின்றி ,செய்திகளையும் வீடியோக்களையும் முதலில் பரிமாறிட வேண்டும் என்ற உந்துதலில், சற்றும் சிந்திக்காது செயல்படும் அளவிற்கு  மனிதனின் மூளை மழுங்கடிக்கப்பட்டுவிட்டது ..
அறிவை இழந்து கொண்டிருக்கிறோம்  என்ற விழிப்புணர்வு கூட  நம்மிடம் இல்லை. தகவல்கள்  பரிமாறுவதில் முதலில் இருக்கவே விரும்பும் நாம் , வாழ்க்கையில் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை சிந்தித்துப் பார்க்க மறந்துவிட்டோம். எதையும் முதலில் நாமே பகிரவேண்டும் என்ற உந்துதலில்  தகவலறிவு கொண்டே  எல்லாவற்றையும் பார்க்கிறோம். நம் கண் முன்னே  இருக்கும் இயல்பு வாழ்க்கையைவிட  சமூகவலைதளங்களில் இருக்கும் மாய வாழ்க்கையை நோக்கி ஈர்க்கப்படுகிறோம்.அதன் விளைவு யதார்த்த வாழ்க்கை நம்மை ஒதுக்கி வைக்கும் போதே உணர்கிறோம்.அதற்க்குப்பின் அழுது புலம்பி என்ன பயன்?
         குறுஞ்செய்திகளையும்,   அவசர செய்திகளையும், ஆரோக்கிய செய்திகளையும் உடனுக்குடன்  மற்றவர்களூக்கு அனுப்பி எதிலும் நாமே முதலில்  உலகிற்கு காட்டிக்கொள்ள விரும்பும் நாம் , அந்த செய்திகள் பற்றிய நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை .நம்மை பொறுத்தவரை வந்த செய்திகளை உடனே பரப்பிவிட வேண்டும். அவ்வளவே. அதனால் ஏற்படப்போகும் நல்லது கெட்டது குறித்து நாம் சிறிதும் கவலைப்படுவதில்லை. அதற்க்கு நமக்கு நேரமும் இல்லை. விருப்பமும் இல்லை..படித்தவர்கள் தான் இப்படி என்று எண்ணிவிட வேண்டாம்.
       
              படித்த,நகர்ப்புற மக்களுக்கு  எந்தவிதத்திலும்  தாங்கள் எந்தவிதத்திலும் குறைந்தவர்களில்லை என்று கிராமப்புறங்களிலும் மக்கள் சமூக வலைதளங்களுக்கு அடிமையாக இருக்கின்றனர்.   ஆபாச வலைதளங்களுக்கு இளைஞர்கள் மட்டுமன்றி, சிறார்களும் பெரியவர்களும்  அடிமை சாசனமே எழுதிக்கொடுத்திருக்கிறார்கள். இதனால் தங்கள் வாழ்வு அதலபாதாளத்திற்குப்  போவதை உணராமலேயே  வாழ்கிறார்கள்.
           சமூக வலைதளங்கள் நம்  சமூக அக்கறையை முற்றிலும்  சிதைத்து,எல்லாவற்றையும் விளம்பர நோக்கோடு பார்க்க வைத்துவிட்டது. நமது தற்பெருமையை வளர்த்துவிடுகிறது.. நான் என்ற உணர்வை அதிகரிக்கச் செய்கிறது.. சுய விளம்பரம் தேடியலையச் செய்கிறது.. பெருமை பீற்றீக் கொள்ளச் செய்கிறது.. இது எதையும் அறியாது நாமும் அதன் பின்னால் கண் மூடித்தனமாகப்  போய்கொண்டிருக்கிறோம்.
          டெக்னாலஜி வளர்ச்சியை நம்மால் தடுக்க முடியாது... அதற்காகக்  கண் மூடித்தனமாக பின் தொடரவும் கூடாது.. நமக்கு எது தேவை , எது தேவையில்லை என்று  பிரித்தறியும் அறிவோடு, தேவைக்கு மட்டும் பயன்படுத்தினால் நன்மையே விளையும் ..

          நமக்குப் பின் வரும் சந்ததிக்கு  நாம் நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டியது மிக மிக அவசியமாகும். எனவே தேவைக்கு மட்டும் இணையத்தை பயன்படுத்தி பழகுவோம்.. நல்ல சந்ததி உருவாக்குவோம்..

 




வியாழன், 26 ஜூலை, 2018

சோம்பல் ..

சோம்பல்...

சோம்பல் இல்லா மனிதர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. சிறுவயதிலிருந்தே நம்மோடு ஒட்டிக்கொண்டு நம் சக்தியை  எல்லாம்  உறிஞ்சிவிடுகிறது. நம் ஆற்றலைப் பிரித்து நம்மை செயல்பட விடாது தடுத்து நம்மை கீழே தள்ளிவிடுகிறது. இதை நாம் உணர்ந்தாலும் நம்மால் இந்த கொடிய பழக்கத்திலிருந்து விடுபடமுடிவதில்லை.

                           சோம்பலில் இருவகைகள்  இருக்கிறது. மனச்சோர்வு மற்றும் உடல் சோர்வு. மனதில் எழும் கருத்துக்கள் மீதான தொடர் சிந்தனையால் மனம் ஒரு நிலையில் சோர்ந்துவிடுகிறது.,தன்னம்பிக்கையும் இழக்கிறோம்..
உடல் சோர்வானது தொடர் உழைப்பால்  ஏற்படுகிறது..நம் உடல் பலவீனமும் உடற்சோர்வுக்கு ஒரு காரணாமாக இருக்கிறது..எந்த வகையாயினும் சோம்பல் என்பது நமது முக்கியமான எதிரியே.

                         இந்த சோம்பலால் நமது மனம் எதிலும் ஆர்வம் இன்றி இருக்கிறது.ஒரு உற்சாகமோ சந்தோச மனநிலையோ இன்றி எதிலும் பிடிப்பின்றி,எப்போதும் கோவமான மனநிலையிலும் எரிச்சலோடும் கடுகடுவென்று இருக்கிறது. தொடரும் இந்நிலையால் நம் வாழ்வே நமக்கு சுமையாகிவிடுகிறது
                         சோம்பேறியின் மூளை சாத்தானின் இருப்பிடம் என்ற பழமொழிக்கேற்ப நம் மனமானது தேவையில்லாத சிந்தனைகளில் ஈடுபடுகிறது.. நம் மனவளம் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
சோம்பலுற்ற மனம் நம்மை வேலைகளைச் செய்யவிடுவதில்லை.. சாக்குபோக்குகள் சொல்லிச்சொல்லி நம் வேலைகளை தள்ளிப் போட்டுக்கொண்டே இருக்கிறது நம் மனம். ..வேலை செய்யாது இருப்பதற்கு ஏற்ற பொய்க் காரணங்களை  வரிசையாக அடுக்குகிறது..இதனால் வேலைகள் எதுவும் குறிப்பிட்ட காலத்தில் முடிவடையாது மேலும் நம்மை தொல்லைப்படுத்துகிறது. இதனால் பணிச்சுமையும் அதிகரித்துக்கொண்டே போகிறது..இதுவும்  நம்மை மேலும் மேலும் சோர்வடையச் செய்கிறது.பழக்கமாகிவிட்ட இந்த சோம்பலால் நம் நிம்மதியும் மனஅமைதியும் கெடுகிறது. நல்ல விசயங்களை பழகத்  தயங்கும் நாம் எளிதில் சோம்பலுக்கு பழகிவிடுகிறோம்.
                      இந்தக் கொடிய பழக்கத்திலிருந்து எப்படி மீள்வது என்று பார்த்தால்  மிக எளிய வழிகள் நிறைய இருக்கின்றன. உடல் ஆரோக்கிய குறைவினால் ஏற்பட்ட சோம்பலென்றால் அதற்க்கான  மருத்துவ சிகிச்சையில் சரியாகிவிடும்..அதிக வேலைப்பளு, தொடர் பயணம்,வயது போன்ற காரணங்களால் ஏற்பட்ட சோர்வெனில்  சத்தான உணவு,முறையான ஓய்வு,சில உடற்பயிற்சிகள், மூச்சுப்பயிற்சிகள்,நடைப்பயிற்சி போன்றவைகள் மூலம் சரிசெய்து கொள்ளலாம்..இதனால் நாம் அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்படமுடியும்.
                                       சரியான தூக்கமில்லையென்றாலோ, இல்லை தேவைக்கு அதிகமான தூக்கமென்றாலோ சோம்பல் நம்மைத் தேடி வந்துவிடும். ஒரு நாளின் அதிகபட்சம் ஏழு மணி நேரமும் குறைந்தபட்சம் 5 மணிநேர தூக்கம் நமக்கு அவசியம் . இதில் அளவு கூடியோ குறைந்தோ போனால் சோம்பலை நாமே வெத்திலை பாக்கு வைத்து அழைக்கிறோம் என்று அர்த்தம்.சரியான தூக்கம் நம் செயல்திறனை அதிகரிக்கும்.ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி எழ பழக்கப்படுத்திக் கொண்டால் நம்மை சோம்பல் அண்டாது.இதனால் நம்மால் சுறுசுறுப்பாகவும் விரைவாகவும் செயல்படமுடியும்.

                                     அதிக உடல் எடை இருந்தாலும் நம்மால் சுறுசுறுப்பாக வேலை செய்யமுடியாது.ஆற்றல் குறைவே இதற்க்குக் காரணமாகும். எனவே உடல் எடை மீது ஒரு கண் வைத்துக் கொள்ளவேண்டும்.எடை குறைப்புப் பயிற்சிகள் செய்தாலே நம் எடையை சரியான அளவில் பராமரித்திக் கொள்ளமுடியும்..
                                                                                                                                                                                                              நமது உணவுப் பழக்கவழக்கங்களும் சரியான முறையில் அமைய வேண்டும்.காலை உணவை எக்காரணத்தைக் கொண்டும் தவிர்க்கக்கூடாது. காய்கறிகள்,பழங்களை அன்றாட உணவுப்பட்டியலில் தவறாது சேர்த்துக் கொள்ளவேண்டும். இவை நம்மை உற்சாகமாகவும் புத்துணர்ச்சியோடும் வைத்துக் கொள்ளும்.. எங்கே நாம் தவறுகிறோம் என்று  பார்த்து,நம்மை நாமே சரிசெய்துகொண்டால்  எல்லா வளமும் பெற்று சிறப்பாக நாம் வாழலாம்...

புதன், 25 ஜூலை, 2018

ice cream- பனிக்கூழ்

பனிக்கட்டி  ...ஃப்ரெடெரிக் டூடர்

பனிக்கூழ் ,அதாவது ஐஸ்கீரிம் விரும்பாத மனிதர்கள் இவ்வுலகில் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு கண்டிப்பாக உடல் நலக்குறைவு இருக்கும். அவர்கள் தவிர்த்த மற்ற எல்லோருக்கு ம் இந்த ஐஸ்கீரிம் மீது தீராக் காதல்  இருக்கிறது...ஒரு காலத்தில் டாக்டர் சர்டிபிகேட் இருந்தால் மட்டுமே சாதாரணனுக்குக்  கிடைத்துவந்த, ஆடம்பரப் பொருளாக இருந்த ஐஸ்கீரிம் தான் இன்று எல்லோரும் விரும்பும் பொருளாக மாறியிருக்கிறது

இன்று   பல நிறங்களிலும் பல சுவைகளிலும்  எளிதில்   கிடைக்கும் ஐஸ்கீரிம், குடும்ப விழாக்களிலும் திருமணங்களிலும் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது  குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பப்படும் இந்த ,ஐஸ்கீரிம் தன் சுவையால் எல்லோரையும் மயக்கிவைத்திருக்கிறது என்றே சொல்லலாம்.

த ன் குளிர்ச்சி மற்றும் சுவையால் நம்மை கட்டிப் போட்ட ஐஸ்கீரிம் அதிக கலோரி கொண்ட ஒரு உணவாகும்..பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் பெண்களாலேயே அதிகம் விரும்பப்படுகிறது.   எல்லோரையும் ஆட்டுவிக்கும்
இந்த ஐஸ்கீரிம் நமக்கு எப்படி  எப்படி கிடைத்து?  கரையாத கதை ஒன்றுண்டு ஐஸ்கீரிமிற்க்கு..

அமெரிக்காவின் போஸ்டன் நகரில் இயற்க்கையாக உருவாகும் பனிக்கட்டிகளை வெட்டி இந்தியாவிற்க்கு முதன் முதலில் 1833ல் அனுப்பியவர் ஃபிரெட்ரிக் டூடர். குளிர்காலத்தில் உறைந்து  போகும் ஆறுகளிலும் ஏரிகளிலும்  ஏற்பட்ட  பனிப்பாளங்களை வீணாக்காது,மற்ற நாடுகளுக்கு அனுப்பும் எண்ணம் அவருக்குக் தோன்றியது.முதலில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு அனுப்பினார். அவர் நினைத்தது போல் அவ்வளவு எளிதாக இல்லை.  ஐஸ்கட்டிகள் உருகி அவருக்கு பெருத்த நட்டத்தையேக் கொடுத்தன.Spy Pond Ice Harvesting from a 1854 print.jpg

ஐஸ்கீரிம் வணிகத்திலிருந்து அவர் காபி வணிகத்திற்கு மாறினார்.. அதிலும் பெருத்தநட்டம்.  அப்போது அவரது நண்பர் சாமுவேல் ஆஸ்டின் என்பவர்  தனது கப்பல் இந்தியாவிலிருந்து பொருள்களை ஏற்றிவர செல்வதாகவும் போகும்போது காலியாகவே போவதால் அதை டூடர் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று உதவிட முன்வந்தார். டூடரும் சம்மதிக்கவே பனிக்கட்டியை சுமந்துகொண்டு முதல் கப்பல் இந்தியா வந்தது.

அவரது இந்த முயற்சியை ஊரே  கேலி செய்த போதும் முழு நம்பிக்கையோடு  இந்த வணீகத்தில் ஈடுபட்டார் டூடர். பனிக்கட்டியை துறைமுக்த்தில் ஏற்றுவதற்க்குக் கூட அவருக்கு பணீயாளர்கள் யாரும் முன் வரவில்லை.
அவருக்கு தொடர்ந்து நட்டங்களே கிடைத்தது.. இருந்த போதிலும் நம்பிக்கையை மட்டும் அவர் கைவிடவில்லை...

16000 மைல் கடந்து நான்கு மாத கடலில் பயணித்த  அவரது கப்பல் கொல்கத்தாவை வந்தடைந்தது.முதன்முதலில் பனிக்கட்டியைப் பார்த்த வங்காள் மக்கள் தொட்டால் சில்லிடும் அந்த மாயப் பொருளை ஆச்சரியத்தோடு பார்த்தார்கள்.  அதை  வைத்து என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை.



மெல்ல மெல்ல அதனுடைய பயன்பாடு அதிகரிக்க தொடங்கியது..பழச்சாறு,மதுபானம்,போன்றவற்றோடு பனிக்கட்டியை சேர்த்துக் கொள்ளும் பயன்பாடு வந்தது,,சிகரம் வைத்ததுபோல,சமைத்த உணவுகள் இரண்டு நாட்கள் வரை கெட்டுப்போகாமல் பாதுகாத்த விந்தை ஆங்கிலேயர்களை  மகிழ்ச்சியில் ஆழ்த்தியது..


டூடரின் வணிகம் விரிவடையத் தொடங்கியது..சேமிப்புக் கிடங்குகளை கொல்கத்தா,பம்பாய்,மற்றும் மதராஸ் போன்ற நகரங்களில் அமைத்தார்.மதராஸிக் அவர் கட்டிய சேமிப்புக்கிடங்கே இன்று  ஐஸ்ஹவுஸ் என்று அழைக்கப்படுகிறது.
Image result for frederic tudor ice king



இந்த வணிகத்தின் மூலம் டூடர் மிகப்பெரிய செல்வந்தர் ஆனார்.அன்றைய காலகட்டத்தில் அமெரிக்காவுக்கு இந்தியாவில்லிருந்தே அதிகமான் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்திருக்கிறது.இங்கிருந்து பருத்தி,வாசனைப்பொருள்கள்,தேக்கு,சந்தனம்,மிளகு போன்றவை அதிக அளவில் அனுப்பப்பட்டு வந்திருக்கிறது...வெளிநாட்டு மோகத்தில் கரப்பான் பூச்சிகளும் இங்கிருந்து கப்பலேறின...

நீராவியைக் கொண்டு பனிக்கட்டி தயாரிக்கமுடியும் என்று நிருபிக்கப்படும் வரையில் அமெரிக்காவிலிருந்து  ஐஸ் இறக்குமதி செய்யப்பட்டு வந்திருக்கிறது. ஐஸ் ராஜா என்றழைக்கப்பட்டு வந்த டூடரின் வணிகம் கொஞ்சம் கொஞ்சமாக சரியத் தொடங்கியது..அவர் உருவாக்கிய சென்னை ஐஸ்ஹவுஸ் விவேகானந்தர் இல்லம் என்றழைக்கப்படுகிறது.  இன்றும் நினைவுச்சின்னமாக இருந்து வருகிறது..

திங்கள், 23 ஜூலை, 2018

மொழி வளர்ப்போம்...அடையாளம் காப்போம்..

மொழி-நம் அடையாளம்



நமது எண்ணங்களையும் உணர்வுகளையும் ஒருவருக்கொருவர் வெளிப்படுத்த, நம் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள,நம் சிந்தனைகளை பகிர்ந்துகொள்ள , நம் தேவைகளை மற்றவர்களுக்கு உணர்த்த, நமக்கு வேண்டியதை  பெற்றுக்கொள்ள நமக்கு மிகவும் உதவியாக இருப்பது மொழி.
மொழிகள் இல்லை என்றால் நமது நிலைமை என்னவாக இருந்திருக்கும்..?
நினைத்துப் பார்க்கவே இயலவில்லையல்லவா...மொழிகள் இல்லையென்றால் நாம் இல்லை. மனிதன் இவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கமுடியாது...எண்ணங்களை சரியான முறையில் ,சரியான அளவில்  வெளிப்படுத்த நமக்கு மொழிகள் மிகவும் உதவியாக இருக்கின்றன.


ஒவ்வொரு  மொழியிலும் லட்சக்கணக்கான சொற்கள் இருக்கின்றன.அதில்  உபயோகத்தில் இருக்கும் சொற்கள் என்று பார்த்தால் சில ஆயிரக்கணக்கான சொற்களே.. அதிலும் குறிப்பிட்ட சில  சொற்களையே நாம் அதிகம் உபயோகப்படுத்துகிறோம். .நாம் பயன்படுத்தும்  சொற்களிலும்  பிறமொழிக் கலப்பில்லாத சொற்கள் மிக மிகக்  குறைவே..

நம் தாய்மொழியான  தமிழில் பெரும்பாலும் வடமொழிச்சொற்களும் ஆங்கில மொழிச்சொற்களும்  கலந்திருக்கின்றன..  ஒரு புதுவகையான மொழியை நாம் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம் நம் மொழி செம்மொழி என்பதை மறந்துவிட்டோம்.. எந்த மொழியோடும் கலக்காது தனித்து நின்று செயல் படக்கூடிய வல்லமை வாய்ந்தது   நம் தமிழ் மொழி என்பதை மறந்து , பிறமொழிச் சொற்கள் கலந்து பயன்படுத்துகிறோம்.


கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன்தோன்றி மூத்தகுடி நம் மொழி என்பதை நாம் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டிய சரியான நேரம் இது.. நம் மொழியில் இல்லாத சொற்களே இல்லை.வரும் தலைமுறைக்கு நாம் என்ன விட்டுப்போகிறோம்? சிதைந்து போன மொழியையா?
இல்லை சீர் மிகு மொழியையா..? சிந்திக்க வேண்டிய தருணமிது...

சற்றே முயன்றால்.நம்மால் மறக்கப்பட்ட சொற்களை மீண்டும் புழக்கத்தில் கொண்டு வரமுடியும்..ஆங்கிலம் கற்க  காட்டும்  அக்கறையை நாம் ஒவ்வொருவரும் நம் தாய்மொழியைம் கற்க  காட்டினால் நம் மொழி எழுச்சிபெறும்.

தமிழில்   நிறைய நூல்களை  வாசிக்கத் தொடங்குவோம்...அதனால் பழைய ,மறந்து போன நூல்கள் மீண்டும்  புத்துயிர் பெறும்....இதனால் மக்களிடையே
மொழிவளம் பெருகும்...மொழி செழித்தால் இனம் செழிக்கும்... இனம் செழித்தால் நாடு செழிக்கும்... நாடு  செழித்தால் உலகம் உய்யும்.


மொழிகளின் களஞ்சியம்:


நம் இந்தியாவில் மொத்தம் 3,372 மொழிகள் பேசப்பட்டுவருகிறது... இதில் 18 மொழிகளே அதிகாரபூர்வ  அரசு  மொழிகளாகும்..மற்ற மொழிகள் அனைத்தும் பேச்சு வழக்கில் மட்டுமே இருக்கின்றன.  பெரும்பான்மையான மொழிகளுக்கு எழுத்து வடிவமே இல்லை. ஒரு காலத்தில் கோலோச்சிய மொழிகளில் பல இன்று இல்லை.அதற்கு முக்கிய காரணம் அவை எழுத்து வடிவம் பெறாததே. எடுத்துக்காட்டாக  அந்தமான் நிக்கோபாரில் பேசப்பட்டுவந்த
போ மொழி ,கேரளாவில் கொச்சிப்  பகுதியில் பேசப்பட்டுவந்த க்ரியோல் மொழி..கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 5 மொழிகள் அழிந்துவிட்டன. கிட்டத்தட்ட  42 மொழிகள் அழியும் நிலையில் இருக்கின்றன.
 ஒரு மொழியை அழிய விடாமல் காப்பது நமது கடமையாகும்..

 அழியக்கூடிய நிலையிலிருக்கக்கூடிய மொழிகளின் பயன்பாட்டை அதிகரிக்கவேண்டும்.  அம்மொழிகளைக் கற்க ஆர்வம் காட்டவேண்டும். பேச்சுமொழியில் அவற்றின்செயல்பாடு அதிகரிக்க வேண்டும். எழுத்துவடிவில் நிறைய புத்தகங்கள் வரவேண்டும்..அம்மொழிகளை பள்ளிகளில் பாடமாக வைக்கவேண்டும்..இந்த வகை நடவடிக்கைகளால் மொழிகள் அழிவதை தடுக்கமுடியும்.இனங்கள் அழிவதையும் தடுக்கமுடியும்..



சனி, 21 ஜூலை, 2018

உப்பு கடந்து வந்த பாதை

 உப்பு---கடத்தப்பட்ட வரலாறு                                       

உப்பு விளையும் களத்திற்கு உப்பளம் என்று பெயர். உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்ற பழமொழி நாம் அறிந்ததே..நாமெல்லாம் சாதாரணமாக இன்று நினைக்கும் உப்பு ஒரு காலத்தில் மதிப்பு மிக்க ஒரு பொருளாக இருந்திருக்கிறது . உப்புப்  பெறாத விசயம் என்று நம்மால் மிக எளிதாகக் கருதப்படும் உப்பு   அந்தக்  காலத்தில் ஒரு பெரிய போராட்டத்திற்கே காரணமாக இருந்திருக்கிறது. காந்தியின்  தண்டி யாத்திரை உப்பிற்காக நடத்தப்பட்ட ஒன்றே.

உப்பின் பழமை

சத்திரகுப்தர் காலத்திலேயே உப்பிற்க்கு வரி விதிக்கப்பட்டுள்ளது..அர்த்தசாஸ்த்திரத்தில் உப்பிற்க்கு தனி வரி விதிக்கப்படவேண்டும் .. அதற்க்கென தனி அதிகாரி நியமிக்கப்படவேண்டும் என்று சாணக்கியர் கூறியுள்ளார் .இதிலிருந்தே உப்பின் மகிமையை நாம் அறிந்துகொள்ளலாம்.

மொகலாயர்கள் ஆட்சியிலும் உப்பின் மீது வரி விதிக்கப்பட்டிருந்திருக்கிறது.. ஆனால் அது மிக சொற்பமான அளவிலேயே வரிவிதிப்பு
இருந்திருக்கிறது .சோழர்கள் காலத்தில் நெல்லின் விலைக்கு சமமாக உப்பின் விலை இருந்திருக்கிறது. பெரிய பெரிய உப்பளங்களுக்கு மன்னர்களின் பட்டப்பெயர்கள்  சூட்டியிருந்திருக்கின்றனர். உதாரணமாக  பேரளம் , கோவளம்  .சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் காலத்தில்  உப்பு வணிகம் அரசர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்திருக்கிறது.






ஆங்கிலேய அரசின் சுரண்டல்கள்

அன்றும் சரி, இன்றும் சரி  உப்பு உற்பத்தியில் முதலிடத்தில் இருப்பது குஜராத்  மாநிலம் தான்.  இங்கு பாரம்பரியமாக உப்பு விளைவிக்கப்படுகிறது .இங்கு இருந்து தான் வட மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.
ஆங்கிலேய அரசு இந்த உப்பு வணிகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர விரும்பி அநேக நிபந்தனைகளை இட்டனர்.. அரசிடம் மட்டும் தான் உப்பு விற்கப்பட வேண்டும் என்று நிபந்தனை போட்டனர். உப்பளங்களைக் கண்காணிக்க சால்ட்   இன்ஸ்பெக்டர்கள்  நியமிக்கப்பட்டனர்..ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதைத் தடுத்தனர்.ஆங்கிலேயர்களின் இந்த நடவடிக்கைகளை எதிர்த்து பலர் உப்பை கடத்தி விற்றனர்.. அவர்களின் மீது கடுமையான குற்றங்கள் சாட்டப்பட்டன.

முள்வேலி
உப்புத் தொழிலை தங்கள் கட்டுப்பாட்டுன் கீழ் கொண்டுவர விரும்பிய ஆங்கிலேயர்கள் ,ஒரிசாவிலிருந்து இமயமலையின் நேபாள் எல்லைவரை  ஒரு முள்வேலி அமைக்கத் திட்டமிட்டனர்.அதற்க்கான வேலைகளும் துரிதமாக தொடங்கபட்டன..ஒரு மைலுக்கு ஒரு சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது.  இங்கு வேலை பார்ப்பவர்களுக்கு அதிக அளவு சம்பளமாக ரூபாய் 5 கொடுத்து வந்தனர்.. இது ஒரு விவசாயியின் ஆறுமாத வருவாயைவிட அதிகம்..

இந்த தடுப்புவேலிகள் இந்தியாவை இரண்டாகப் பிரித்தது. சக்கரை, தானியங்கள்,எண்ணெய் , உப்பு என எந்த பொருள்களும் அரசின் கண்களில் இருந்து தப்பவில்லை கடுமையான இந்த வளையத்தையும் தாண்டி பஞ்ஞாரா இனமக்கள்  உப்பைக் கடத்தத் தொடங்கினார்கள்..அதிகார துஷ்பிரயோகமும் வன்முறைகளூம் ஆங்காங்கே தலை தூக்கத் தொடங்கின. கடத்தல்காரர்களுடன் நடந்த சண்டையில் நூற்றுக்கணக்கான காவலர்கள் கொல்லப்பட்டனர் .காவலர்களின் வேலைப்பளு அதிகரித்துகொண்டே போனது.   ஞாயிறன்று கூட விடுமுறை மறுக்கப்பட்டது.இரண்டு பகல் ஒரு இரவு தொடர்ந்து பணி செய்யப் பணிக்கப்பட்டனர்

கையூட்டு

உப்பின் மூலம் அரசாங்கத்துக்குக் கிடைத்த வருமானம் அதிகரித்துக்கொண்டே போனது.இதனால் சோதனைச்சாவடி ஊழியர்கள் கையூட்டு பெற்று குறைந்த விலைக்கு தாங்களாகவே விற்கத் தொடங்கியதுடன், கையூட்டை ஒரு வழக்கமாகவே கொண்டுவந்தனர் .இதனால் முள்வேலியின் இறுக்கம் குறையத்தொடங்கியத

வெள்ளி, 20 ஜூலை, 2018

சுற்றுலா

பயணங்கள்




நம்மில் பெரும்பாலோர்க்குப் பிடித்த ஒரு பொழுதுபோக்கு.  சும்மா ஒரு ரவுண்ட் என்றே  தானிருக்கும் ஊரையே சுற்றி வருபவர்களும் உண்டு..இவர்களால் சிறிது நேரம் கூட வீட்ல் இருக்கமுடியாது..  சிறைச்சாலையில் இருப்பது போலவே தவிப்பர்... விடுமுறையிலோ ,பள்ளி , கல்லூரி விடுமுறையிலோ பயணம் செய்பவர்கள் அதிகம்.அதிலும் மலைப்பிரதேசங்களுக்கு பயணம் என்றால் போதும்.. நாம் எப்போதுமே தயாராகவே இருக்கிறோம்.


குடும்பத்தோடு சுற்றுலா, நண்பர்களோடு, கல்விச்சுற்றுலா, அலுவலகச் சுற்றுலா  என்று நம்மோடு பின்னிப் பிணைந்திருக்கிறது இந்தப் பயணம்...
அலுத்து சலித்த மனதிற்கு பயணங்கள்  புத்துயிர்  ஊட்டி மீண்டும் ஒரு சம நிலைக்கு கொண்டு வருகிறது..

இந்தப் பயணங்களில் நாம் சந்திக்கும் புதுப்புது  மனிதர்கள், புது இடங்கள், புதுப்புது அனுபவங்களுக்கு இணை எதுவுமில்லை...இந்த அனுபவங்கள் நம்மை மேலும் மேலும் பண்படுத்தி, மீண்டும் இந்த உலகத்திற்கு அனுப்புகிறது.

பயணங்களில் நம்மையும் அறியாது  நமது மனம் மகிழ்ச்சித் தளத்திற்கு போய்விடுகிறது..இதனால் தான்,எவ்வளவு  வயதானவர்கள் கூட சுற்றுலாக்களில் சிறுபிள்ளையாய் மாறிவிடுகிறார்கள்... அவர்களின் ஆழ்மனம் தூண்டப்பட்டு,பதிந்திருக்கும் பழைய நினைவுகளின் ஆனந்தங்களை மீண்டும் புதுப்பிக்கிறார்கள்...அளவற்ற மகிழ்ச்சியில் தங்களையே மறந்தும் போகிறார்கள்..பெரியவர்களுக்கே இப்படி என்றால் மற்றவர்களைக் கேட்கவா வேண்டும்..

Add caption
குழந்தைகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்...பயணதினத்திற்குப் பல நாட்கள் முன்பே மனதளவில் தயாராகிவிடுகிறார்கள்.... அவர்களூக்கு வேண்டிய  பொருள்களை  எடுத்து வைக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்...
அளவற்ற மகிழ்ச்சிக்குத் தங்களை தகுதியுடையவர்களாக்கிக் கொள்கிறார்கள்..

மலைப்பிரதேசப் பயணங்கள் நம்மை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்கிறது... நாம் உடல் அளவிலேயே வீடு திரும்பிகிறோம் மனதை அங்கயே விட்டுவிட்டு வருகிறோம்...நினைவுகளில் நாம் விரும்பும் நேரமெல்லாம் அந்த சந்தோச நாட்களுக்கு நாம் போய் போய் வருகிறோம்.
இதனால் புத்துணர்வு அடையும் நாம் முன்பைவிட  அதிகமாகவும் ஈடுபாட்டோடும் நம் கடமைகளைச் செய்ய முடிகிறது




.


ஒவ்வொரு பயணமும்  நம்மை சீர்படுத்துகிறது..மேம்படுத்துகிறது. நம்முடைய வருமானத்தில் ஒரு சிறு பகுதியை நாம் இதற்கென ஒதுக்கி வந்தால்  போதும்..நம்மால் ஆண்டுக்கொடு முறையாது நாம் விரும்பிய இடங்களை சுற்றி வரமுடியும்...என் மலைப்பிரதேசச் சுற்றுலாக்களீன் சில புகைப்படங்கள் சில....






செவ்வாய், 17 ஜூலை, 2018

வாழ்க்கையைக் கொண்டாடுவோம்

மானிடப்பிறப்பு அரிது


அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது... மானிடப் பிறப்பு  உயர்ந்த பிறப்பு..
பிறந்தோம்...மடிந்தோம்..என்று முடிந்து விடுகிறது நம்மில் பெரும்பாலானோர் வாழ்க்கை... இதற்குத்தான் இந்த அரிய பிறப்பா...?

வாழ்க்கையை நாம் வாழ்கிறோமா என்று பார்த்தால் இல்லை என்பதே நமது பதிலாக இருக்கிறது..வாழ்க்கையை நாம் வாழ்வதில்லை.. மாறாக, கடத்துகிறோம்...கண் விழித்தது முதல் கண் உறங்கும் வரையான நமது நாளானது பொழுதை கடத்துவதாகவே  இருக்கிறது...இதனாலயே எளிதில் சலிப்படைகிறோம்... எதிலும் மனநிறைவு வருவதில்லை.. அடுத்து,அடுத்து என்று எதையோ தேடி ஓடிக்கொண்டே இருக்கிறோம்... எதிலும் திருப்தி அடையமுடிவதில்லை  நம்மால்..

எதனால் இந்த நிறைவற்றதன்மை?.. எதை நாம் தேடுகிறோம்? என்ன வேண்டுகிறோம் நாம்? என்ன எதிர் பார்க்கிறோம்?.. பதிலே இல்லாத கேள்விகள்...

ஒவ்வொரு அடியையும் எச்சரிக்கையோடு கடக்கும் அதே நேரத்தில், நாம் நடக்கும் பாதையில் பூத்திருக்கும் ஒரு பூவை ஏன் ரசிக்கமுடிவதில்லை?
என்றைக்காவது  சிந்தித்திருப்போமா ஏன் என்று..?.. பொருளாதாரத் தேடல் நம்முடைய ரசனை என்னும் உண்ர்வை நம் பார்வையிலிருந்து  மறைத்துவிட்டதே காரணம்...பொருளாதார நிறைவு தரும் அதே உணர்வை நம் குழந்தையின் ஒரு மென் முத்தம் தரும் ...மணம் வீசும் மலர்த்தோட்டத்தை காணும் போது ஏற்படும் மகிழ்ச்சியும் நாம் விரும்பிய ஒரு  விலையுயர்ந்த பொருளை வாங்கும் போதும் ஏற்படும் மகிழ்ச்சியும் ஒன்றே...

யாருடைய வாழ்விலும் நூற்றுக்கு நூறு சதவீதம் கஷ்டங்களே ஏற்படுவதில்லை.. எவ்வளவு கடினமான பாதையாகிலும் கண்டிப்பாக சிறு சிறு சந்தோசமான நிகழ்ச்சிகள் நடந்தேயிருக்கும்.... அவற்றை நாம் உணர்ந்து மகிழ்ந்தால் போதும்...ரசனைகளை உயிர்பித்துக் கொண்டாலேபோதும்...அளவில்லா ஆனந்தங்கள் நம்மை வந்தடையும்..
சின்னச் சின்ன சந்தோசங்களூக்கு நாம் முன்னுரிமை கொடுத்தாலே 
நம் வாழ்க்கையின் போக்கு மாறிவிடும்...

நமக்குப் பிடித்த பாடல்,நமக்குப் பிடித்த உணவு, நமக்குப் பிடித்த  வண்ணம்,நமக்குப் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ,நமக்குப் பிடித்த இடம், என்று எவ்வளவோ இருக்கிறது ரசித்து மகிழ்ந்திட... இவற்றையெல்லாம்  உணர்ந்தாலே ,நம்மால் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ முடியும். அடுத்த விநாடியில் என்ன நடக்கும் என்று தெரியாத நிலையில் இந்த நொடியை சிறப்பாக  வாழ நாம் ஏன் முயலக்கூடாது?இரவலாகக் கிடைத்த வாழ்க்கையை நிறைந்த மனதோடு ஆனந்தமாய் கொண்டாடுவோம்..

முயன்றால் முடியாதது என்று எதுவுமில்லை.. ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியோடு,  மகிழ்ச்சி அலைகளைப்  பரப்புவோம்... நம் மகிழ்ச்சி மற்றவர்களையும் தொற்றிக்கொள்ளட்டும்....இந்த உலகம் மகிழ்ச்சியால் நிறையட்டும்...



திங்கள், 16 ஜூலை, 2018

சுயபிரகடனம்

சுயபிரகடனங்கள்


இந்த வார்த்தை நமக்கு புதுசா இருக்கலாம். ஆனா தெரிந்தோ தெரியாமலோ
நாம அடிக்கடி செய்யும் ஒரு செயல் தான் இது..சுயபிரகடனம் ...ஆங்கிலத்துல இத ஆட்டோ சஜஷன் என்று சொல்வாங்க..இப்போ உங்களுக்கு புரிஞ்சமாதிரி இருக்குல...

நண்பன் படத்துல நடிகர் விஜய் அடிக்கடி சொல்வாரே...ஆல் இஸ் வெல்...அது ஒரு சுயபிரகடனம் தான்..இப்போ நல்லா புரிஞ்சுருச்சுருக்கும் சுயபிரகடனம்னா என்னவென்று... அதாவது நமக்கு நாமே உற்சாக வார்த்தைகளை சொல்லிக் கொள்வது.. நமக்கு நாமே நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை சொல்வது....நம்ம  வீட்டுல பெரியவங்க எல்லாம் நன்மைக்கேனு  சொல்லி கேட்டிருப்போம்... அதுவும் ஒரு சுயபிரகடனம் தான்.. 

 மனசு தளர்வா இருக்குற சமயத்துல இந்த  மாதிரியான சுயபிரகடனங்கள் நமக்கு மிகவும் உதவியா இருக்கும்.. சோர்ந்துவிடாம உற்சாகத்தோடு நம்மை செயல்பட வைக்கும்..  இந்த சுயபிரகடனங்களை எவ்வளவுக்கு எவ்வளவு உபயோகிக்கிறோமோ அவ்வளவு நமக்கு நல்லதே நடக்கும்...

இந்த மாதிரி சுயபிரகடங்களைச் சொல்லிக்கொள்வதால் நம்மால் மனத்தடைகளை எளிதில்  தாண்டிச் செல்ல முடிகிறது. . நம் செயல்களை சிறப்பாகவும்  செய்ய முடிகிறது...நம் முன்னேற்றப் பாதையில் நாம் தொடர்ந்து செல்ல இந்த மாதிரி சில செயல்களை செய்தால் போதும்....மனதின் பாரங்கள் குறைந்து லேசாகும்...நம்மால் கொண்டாட முடியும்...வாழ்க்கை ஆனந்தமயமாகும்...
இன்றே இதை செய்யத் தொடங்குவோம்...

சில சுயபிரகடனங்கள் இங்கே ...முயன்று பார்க்கலாமே நாம்..

என்னால் முடியும்...
நான் வெற்றி பெறுவேன்...
நான் தைரியமாக இருக்கிறேன்...
நான் சரியான முடிவுகளை எடுப்பதில் சிறந்தவன்/சிறந்தவள்...
நான் வாழ்க்கையில்முன்னேற்றத்தை நோக்கி போய் கொண்டு இருக்கிறேன்..
நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்...
என் திறமைகளை நான் முழுமையாக வெளிப்படுத்துகிறேன்...
என் குறிக்கோள்கள்களை நான் எளிதில் அடைகிறேன்...


இவை சில உதாரணங்களே....உங்களுக்கு தேவையான் சுயபிரகடனங்களை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள்...நேர்மறையாகவே இருக்கட்டும் உங்கள் சிந்தனைகள்...இவற்றை பயன்படுத்தி வாழ்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள்...


வாழ்க வளமுடன்....


.





ஞாயிறு, 15 ஜூலை, 2018

நம்பிக்கை....

  மனதில் எழும் எண்ணங்களின் தீவிரத் தன்மையே நம்பிக்கையாகும்.. போட்டிகள் நிறைந்த இந்த காலகட்டத்தில் நம்  வாழ்வை ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு அழைத்துப் போகிற
பொறுப்பாளர் . எந்த ஒரு பொருளின் மீதோ இல்லை நபரின் மீதோ நமக்கு ஏற்படுகிற தீவிரமான எண்ணமே நம்பிக்கையாகிறது. சிலருக்கு தன்னை விட மற்றவர்கள் மீது அளவு கடந்த நம்பிக்கை உண்டு. உதாரணமா கடவுள் மீதான ஒரு நம்பிக்கைய சொல்லலாம்..கோயிலுக்கு போய் சாமி காதுல சொல்லிட்டா போதும் கேட்டது நடந்துரும்னு நம்புறவங்க அதுல நம்மளோட சுய முயற்சி என்னனு நினைச்சுப் பார்க்க மறந்து போயிடுறாங்க..  எந்தவித நம்பிக்கையா இருந்தாலும் சரி அது ஒரு தீவிர நம்பிக்கையோ இல்ல சும்மா தோன்றும் நம்பிக்கையோ இல்ல குருட்டு நம்பிக்கையோ எதுவா இருந்தாலும் சரி அதுல நம்மளோட முயற்சியும் இல்லைனா நிறைவேறுவது சந்தேகமே .சோ நம்பிக்கையோட முயற்சியும்  இருக்கனும்..

எத்தனை முறை விழுந்தாலும் மீண்டும் மீண்டும் எழுந்திருக்கும் குழந்தை போல் நாமும் இருக்க வேண்டும்.தவறுகளிலிருந்து கற்கும் பாடங்கள் தான் நம்மை சீர்படுத்தி நல் வழிபடுத்தும்...மனஉறுதியும் அதிகரிக்கும்...தோல்விகள் நம்மை செதுக்கவே என்பதை உணர்ந்து கொண்டால் போதும்..நாம் முன்னேற்றப்பாதையில் நடக்கத் தொடங்கிவிடுவோம்..

வீழ்வது எழுவதற்கே என்ற புரிதல் இருந்தால் நம் வாழ்வு நாம் விரும்பும் வகையில் அமையும் .  வீழ்ச்சி கண்டு சோர்ந்திடாது, தொடந்து நடப்போம்...
நம் மீது நம்பிக்கை வைப்போம்... நம் உழைப்பை நம்புவோம்....வெற்றி நமதே...
                 


சனி, 14 ஜூலை, 2018

emotional bank account

EMOTIONAL BANK  ACCOUNT


                   ' எமோஷனல் ஃபேங்க் அக்கவுண்ட்'...புதுசா இருக்குல இது....என்னவா இருக்கும்னு ஒரு ஆர்வத்த தூண்டுதுல .. இப்போ பாக்கலாம் என்னனு....இது ஒண்ணும் பெரிய விசயம்லா இல்லை..நம்மில் சில பேரு ஏற்கெனவே இப்பிடித்தான் இருக்காங்க...இந்த மாதிரி மனிதர்களை நாம் தாண்டித்தான் வந்துருப்போம் நம்ம வாழ்க்கைல... விவரமா பாப்போம் இப்ப..


பொதுவா ஒரு வங்கில நாம என்ன செய்வோம்னு கொஞ்சம் யோசிச்சு பாத்தா இதும் எளிதாக புரிஞ்சுரும்.  ஒரு வங்கினா பணபரிவர்த்தனை நடக்கும்..பணத்த எடுப்போம்...பிறகு போடுவோம்...பணம் போட்டா அது நம்ம கணக்குல வரவு வைக்கப்படும்...எடுத்தா செலவு கணக்குல வரும். இப்பிடி தான் ஒரு வங்கியோட பரிவர்த்தனைகள் நடந்துகிட்டு வருது... அதே மாதிரி  செயல்பாடு தான் இந்த  எமோஷனல் ஃபேங்க் அக்கவுண்ட்லயும் நடக்குது.

இங்க நாம பணத்துக்குப் பதிலா நாம மனம் என்கிற கணக்குல வரவு செலவு பரிவர்த்தனைகள்  செஞ்சிகிட்டு இருக்கோம்...இப்போ லைட்டா புரியற மாதிரி இருக்கா.. இன்னும் கொஞ்சம் விவரமா பாக்கலாம்.


மனதுல வரவுனா என்னன்னா....ஒருத்தர்கிட்ட நாம் பழகுறப்ப அவுங்க மனசுல
சிலவற்றை வரவு வைக்குறோம்.. நாம காட்டுற அன்பு...மரியாதையா நடக்குறவிதம், உண்மையா இருக்குறது, சொன்ன சொல்ல நிறைவேத்துறது,
மதிப்பு குடுத்தல், விட்டுக் குடுக்குறது, நல்ல செயல்கள் செய்தல்,மற்றவரை புரிந்து நடத்தல்,காயப்படுத்தாமல்  இருத்தல்,....இப்பிடி சொல்லிக்கிட்டே போலாம்....


மனசுல செலவு என்னனனா மேலே சொன்ன எல்லாவற்றிலிருந்தும் முரண்பட்டு இருக்கிறது..அதாவது, கோவப்படுதல், எரிச்சல் அடைதல்,
சண்டை போடுதல், புரிந்து கொள்ளாமை.அன்பு காட்டாமை,குடுத்த வாக்கை காப்பாற்றாமல் இருத்தல், சந்தேகப்படுதல், புறம் பேசுதல், சோம்பேறியாக இருத்தல்..... இப்பிடி சொல்லிக்கொண்டே போகலாம்

சோ...இப்போ எளிதாக புரியும்னு நினைக்கிறேன்..எவருடைய மனசுல நாம் நம்ம வரவுகள கூட்டிக்கொண்டிருக்கிறோமோ அந்த நபர்கள் நமக்கு மிகவும் பிடித்தவர்களாக இருக்கிறார்கள் ..மத்தவங்க நம்ம கூட சண்டை போடுபவர்களா  இருக்கிறார்கள்..அதாவது... நம்ம செலவு  அவுங்க....

நம்ம கணக்குல வரவு வேணுமா இல்ல....செலவு வேணுமானு நாம் தான் முடிவு எடுக்கணும்  .மனங்களில்  வரவுகளை அதிகரித்து, செலவுகளை குறைத்து  மகிழ்ச்சியா  ,ஆனந்தமா  ... நாமும் வாழ்வோம்.. மற்றவர்களையும் வாழவிடுவோம்...வாழ  வைப்போம்....

நம்ம மதுரை

கிழக்கின் ஏதென்ஸ்

எந்த நகரமாக இருக்கும்னு ஊகிக்க முடியுதா உங்களால.?
வேறு எந்த ஊரும் இல்லைங்க.. நம்ம மதுரை நகரம் தான் ஒரு காலத்துல இவ்வளவு பெருமை வாய்ந்ததா இருந்தது.

பழம்பெரும் நகரம்

நகரத்துக்குனு 2500 வருச வரலாறு இருக்குது. தமிழர்களின் பண்பாட்டுத்தலமாகவும் இருந்திருக்கு இந்த நகரம் .வைகை ஆற்றங்கரையில ,கடம்ப மரங்கள் சூழ இருந்த இந்த நகரைச் சுற்றிலும் எண்பெருங்குன்றங்கள் இருக்கு. இந்த குன்றுகளில் சமணத்துறவிகள் தங்கி சமயப்பணி ஆற்றியிருக்கிறார்கள்.
      எண்பெருங்குன்றத்து இருந்தவ முனிவர்
      அறம் பொருள் இன்பம் வீடெனுமி வற்றின்
என்கிறது நாலடியார்...இது போல் நிறைய சான்றுகள் சங்க இலக்கியத்துல இருக்கு..

பாண்டியர்களின் தலைநகராக மதுரை இருந்தது நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச விடயம் தான்  அறுபடை வீடுகளில் முதலாம் வீடான  திருப்பரங்குன்றம் மதுரைல தான் இருக்கு.
இந்த மலைக்கு பின்புறம் தென்பரங்குன்றத்தில எட்டாம் நூற்றாண்டைச்  சேர்ந்த குடைவரை  ஒன்று இருக்கு.
9-10 நூற்றாண்டுகளில் சமண மதம்  இங்கே செல்வாக்கோடு இருந்திருக்கு.
மதுரைக்கு ஆலவாய் என்ற பெயரும் உண்டு.திருவாலவாயன் என்ற பெயர் சொக்கனாதரைக் குறிக்கும்
மதுரையின் தொன்மையான பகுதிகளில் ஒன்று மாடக்குளம்.இந்த பகுதியில இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்திய முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இங்கே ஒரு கண்மாய் உண்டு..மாடக்குளம் கண்மாய். இக் கண்மாய்க்கு அருகில் கபாலி மலை ஒன்று உண்டு.இந்த மலையின் மீது ஏறிப்பார்த்தால் மதுரையை 360 டிகிரி கோணத்துல பாக்க முடியும்..என்ன ஒரு சிரமம் என்றால் 200க்கும் அதிகமான படிகள் உண்டு.

திருமாலிருஞ்சோலை என்றழைக்கப்படும் அழகர் மலைத்தொடர் 25 கிலோமீட்டர் தூரத்துல தான் இருக்கு.
சிலப்பதிகார கண்ணகியும் கோவலனும் கவுந்தியடிகளோடு இந்த மலைத்தொடர் வழியாக வந்ததாக சிலப்பதிகாரத்துல சொல்லப்பட்டிருக்கிறது.இந்த மலையில் உள்ள் கல்வெட்டுக்கள் 2200 முன்பாக வெட்டப்பட்டவை.
இங்கே உள்ள தமிழ் பிராமி கல்வெட்டுக்களில் மதிரை என்ற சொல் குறிப்பிடப்பட்டுள்ளது.அன்றைய மதுரையின் பெயர் மதிரை என்பதை நாம் இதன் மூலம் அறிந்து கொள்ளமுடிகிறது.அன்றைய மதுரை ஒரு சிறந்த ஒருங்கிணைந்த வணிக வளாகமாக,வர்த்தக சங்கமாக இருந்துவந்துள்ளதை கல்வெட்டுக்கள் மூலம் நான் தெரிந்துகொள்ளமுடிகிறது.

இவ்வாறு மதுரையின் பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.அத்தகைய  பெருமை வாய்ந்த நகரத்துல நாம் வாழ்வதற்கே மிகவும் குடுத்து வைத்திருக்கவேண்டும்

வெள்ளி, 13 ஜூலை, 2018

மனம் மலரட்டும்

 நம்ம வாழ்க்கைல நல்ல விசயங்களும் நடக்கும்.. கெட்ட விசயங்களும் நடக்கும்....மகிழ்ச்சி தரும் நிகழ்வுகளும் நடக்கும் ...வருத்தம் தரும் நிகழ்வுகளும் நடக்கும்....இதுல எந்த விசயத்த  நம்ம மனசுக்குள்ள சேர்த்து வைக்கிறோம்ங்குறதுலதான்  விசயமே இருக்கு..

மனதில் பதிந்த நல்ல  நிகழ்வுகள் நம்மை மேலும் மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்திக் கொண்டேதான் இருக்கும்... அத நினைக்கறப்பலாம் நமக்கு மகிழ்ச்சியாவே இருக்கும். நாம செய்ய வேண்டியதெல்லாம் அந்த நிகழ்வுகளில் நம்மை  புதைத்துக் கொண்டே இருந்தால்  போதும் ...அது ஒரு தொடர் நிகழ்வாகிவிடும்.. அதாவது நாம் தொடர்ந்து மகிழ்ச்சியாகவே இருக்கலாம்...பட்..நாம அத செய்யுறதேயில்ல.... காரணம்.. கெட்ட விசயங்களோ...கெட்ட செய்திகளோ சீக்கிரமே  நம்மகிட்ட வந்து அடைக்கலமாகிரும் எந்த வித தடங்கலும் இல்லாம...

இந்த உணர்வுகள் தான் நாம் எளிதில் கோவப்படவோ...ஆத்திரப்படவோ  காரணமாகிருக்கு....நம்ம மன அமைதியும் குலையுது...நம்மள நாம மகிழ்ச்சியா வச்சுக்கலனா வேற யாரு வச்சுக்கப்போறா..... நம்மள நாம நேசிச்சா... மதிச்சா....மத்தவங்களும் மதிப்பாங்க...நேசிப்பாங்க...சோ...நம்ம வாழ்க்கைய சிரிச்சுட்டே வாழப்போறோமா இல்லயாங்குறத நாம தான் முடிவு பண்ணனும்.....முடிவெடுப்போம்.....வாழ்வோம்....

                   ஒத்தை வாழ்க்கையிதை
                    உண்மையாய் வாழ்வோம்...
                    மகிழ்ச்சியாய் வாழ்வோம்....


வியாழன், 12 ஜூலை, 2018

மனம் பறிக்கும் பூனைகள்

சிலருக்கு பூனைகள் பிடிக்கும்...சிலருக்கு பூனைகள்னாலே அல்ர்ஜி..அது முடி கொட்டும்... அது அல்ர்ஜினு சில பேரு பக்கத்துலயே விடமாட்டாங்க....ஆனா எனக்கு பூனைகள்னா ரொம்ப பிடிக்கும்...என்னைக் கவர்ந்த வெள்ளைப் பூனைய பத்தி கொஞ்சம்  உங்ககிட்ட  பகிர்ந்துக்கலாம்னு ஒரு சின்ன ஆசை...


ஐந்து நாள் குட்டியா எங்க வீட்டுக்கு வந்துச்சு.. வந்த அன்னைக்கு அதுனால வழுக்கு தரையில நிக்கக்கூட முடில...அன்னைக்கு இரவு சிவராத்திரியாத்தான் போச்சு...தாயின் பிரிவு ஒரு பக்கம்.... பசி ஒரு பக்கம்...அதுனால தூங்க முடில...சின்ன ஸ்பூன்ல அப்பப்போ கொஞ்ச கொஞ்சமா பால் ஊத்துற  வேலை என் தலைலதான் விழுந்துச்சு...கொஞ்சம் கடுப்போட தான் செஞ்சேன் ரெண்டு மூணு நாளுக்கு....
அப்புறம் என் செல்லப்பிள்ளையாகவே மாறிருச்சு....எனக்கு மட்டுமில்ல.. எங்க குடும்பத்துல இருக்குற எல்லாருக்குமே செல்லம் அந்த பூனை..


அதுக்குனு  பேருனு எதுவும் இல்லனாலும் கூப்பிடுறதுலாம் 'குண்டம்மா' தான்..அந்த வட்டமான் முகம்....பஞ்சுக்கு இணையான அந்த உடல்.....மெல்லிய குரல்....மெத்தெனும் அந்த பாதங்கள்னு கொஞ்ச கொஞ்சமா அதோட வலைல நான் விழ ஆரமிச்சேன்....

அணைப்பு வேண்டி என் மடியில் வந்து படுக்கத்  தொடங்கி....நாளடைவில என் மடி ஒரு  தொட்டிலாவே  மாறிருச்சு...இரவு நேரம்னா  என் கால்களுக்கிடையே வந்து படுத்துக்கும்... குளிர் காலத்துல என் போர்வைக்குள்ள அதுக்கும் ஒரு இடம் கண்டிப்பா இருக்கும்.


வயசு கூடக் கூட குண்டம்மாக்கு சேட்டையும் கூட ஆரம்பிச்சது...தன்னோட தேவைகள உண்ணாவிரதம் மூலமா தெரியப்படுத்துச்சு...அசைவம் இல்லனா சாப்பிடுறதே இல்ல...பால் பக்கம் திரும்பி கூட பாக்குறதில்லனு .. எல்லாவிதத்துலயும்  அஹிம்சை முறைய பின்பற்ற ஆரம்பிச்சுருச்சு... வாரத்துல மூணு நாளு அதுக்கு மட்டும் அசைவ உணவு...அன்னைக்கு மட்டும் அதோட வயிற பாத்தா நல்லா பெருசா இருக்கும்...மத்த நாள்ல சுத்தமா விரதம் இருக்கும்...

 கோவமோ .. மனஅழுத்தமோ எதுவானாலும் அது என்  மடில வந்து  அந்தக் குண்டம்மா உக்காந்ததும் சரியாகிரும். அந்த மென்மை... மடியில் அதன் கனம்... இன்னமும் மனதில் பசுமையாகவே இருக்கிறது.... உன்ன ரொம்ப....ரொம்பவே மிஸ் பண்றேன்டிஎன்  குண்டம்மா....




புதன், 11 ஜூலை, 2018

அமிக்டலா

அமிக்டலா


இந்த வார்த்தையை சில பேர் கேள்விபட்டிருக்கக்கூடும்...பல பேர் இப்பொழுது தான் முதல் முதலாக கேட்கக்கூடும்.  இன்று நான் படித்ததில் என்னை மிக கவர்ந்த வார்த்தை இது.

அமிக்டலா என்றால் என்ன என்று முதலில் பார்ப்போம்..இது நமது உடம்பில் இருக்கும் ஓர் உறுப்பு .தலையாய உறுப்பு..நமது மூளை இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பகுதி உணர்வுகளின் இருப்பிடமாக இருக்கிறது. மற்றொரு பகுதி அறிவின் இருப்பிடமாகும். இந்த உணர்ச்சிகர மூளை பகுதியைத்தான் அமிக்டலா என்கிறோம்.  இந்த பகுதியில் தான் நமது எதிர்மறை உணர்வுகளான, கோவம்,பயம்,குற்றஉணர்வு,ஆத்திரம், பொறாமை,ஆதிக்கஉணர்வு,ஏமாற்றம், ஆசைகள் அனைத்தும் குடியிருக்கின்றன.நம் பின்னந்தலையில் காதுகளுக்குப் பின்னால் இருக்கக்கூடிய  ஒரு சிறிய நாளமில்லாச் சுரப்பி தான் இது.


ஆனால்,மூர்த்தி சிறிசு..கீர்த்தி பெருசுங்குறமாதிரி இந்த உறுப்பு செய்யும் வேலையோ மிகப்பெரிது... நம் எதிர்மறை சிந்தனைகளின் மொத்த வியாபாரி ..இந்த அமிக்டலாதான்.உணர்வுகளை சேமித்து வைத்து, உணர்வுகளின் அடிப்படையில் நம்மை இயங்கச் செய்வது இந்த பகுதி தான்..நம்மை நமது அறிவின் பிடியிலிருந்து விலக்கி .உணர்வுகளின் தொகுப்பாக நம்மை மாற்றிவிடுகிறது இந்த பகுதி.. இந்தப் பகுதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்து, பகுத்தறிவு கொண்டு நாம் செயல்பட ஆரம்பித்தால் நம் வாழ்க்கை நிம்மதியாகச் செல்லும்...

திங்கள், 9 ஜூலை, 2018

நம் வாழ்க்கை....நம் உரிமை....

நம் வாழ்க்கை....நம் உரிமை...


தளை உடைக்கும்
துணிவிருந்தால்
தடைகளும் தவிடுபொடியாகும்.

எட்டி நீ உதைத்தால்
திக்கெட்டும் சிதறியோடும்
கைக்கட்டுகள்... 

இறகு விரித்திட 
அனுமதி தேவையில்லை
விரிந்த வானமது
நம்மை மறுப்பதில்லை...

தடுத்திடும் துணிவும்
எவர்க்கும் இல்லை..
தயக்கமதை 
தயங்கிடாது விரட்டியடிப்போம்...

அன்பு அதை பகிர்ந்து
அன்பின் மிகுதியில் வாழ்ந்திடுவோம்...
வாழ்வின் சுகமதை
சுகித்திடுவோம்...

ஞாயிறு, 8 ஜூலை, 2018

மனதின் வடிவங்கள்

மனம்....... எப்பொழுதும் நம் கூடவே இருக்கும் ....நம்முடனே பேசிக்கொண்டு, நம்மை சீண்டிக்கொண்டு, நம்மை சிக்கலில் மாட்டிவிடும் இந்த மனதை கொஞ்சம் முயற்சி செய்தால் நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துவிட முடியும்.

நம் வீட்டை சுத்தம் செய்வது போல் மனதையும் அவ்வப்போது சுத்தம் செய்து கொண்டே இருந்தால் போதும். மனம் தெளிவாக இருக்கும்.. தெளிந்த மனதின் எண்ணங்கள்  நம்மை மகிழ்ச்சியாக வைக்கும்
  மனதை சுத்தப்படுத்துதல் ஒன்றும் பெரிய விசயமில்லை.எளிதானது தான். மூச்சுப்பயிற்சியே போதும்.தினமும் பத்து நிமிட மூச்சுப்பயிற்சி நமக்கு புத்துணர்வு தரும் அருமருந்தாகும்.மூச்சை உள் இழுக்கும் போதும், வெளியிடும் போதும் மூச்சின் மீது கவனம் இருந்தால் போதும். உள் இழுக்கும் போது  நல்ல விசயங்களை நான் உள்ளே இழுக்கிறேன்...வெளியே விடும் போது கெட்ட விசயங்கள் என்னை விட்டு விலகுகின்றன என்று எண்ணம் இருந்தால் போதும்...நம் மனமானது தானே சல்லடையா வேலை பார்க்க  தொடங்கும். தேவையில்லாத எண்ணங்களை தடுத்து நிறுத்தும்.

இந்த பயிற்சியை குறைந்தது 21 நாட்கள் செய்தால் போதும்..பிறகு நாமே நினைத்தாலும் நம்மால் செய்யாமல் இருக்க முடியாது. நன்கு சலித்து எடுக்கப்பட்ட நல்ல எண்ணங்கள்  நல்ல அதிர்வுகளை உருவாக்கும்.இதனால் நம்மை சுற்றிலும் நல்ல விடயங்களே நடக்கும்.

நம் ஆரோக்கியத்திற்காக ,நம் நிம்மதிக்காக ஒரு இருபது நிமிடங்கள் நம்மால் செலவு செய்திட முடியாதா என்ன?இன்றே  முயற்சியைத் தொடங்குவோம்....
வளம் பெறுவோம்...

புது வருடம்...புது வசந்தம்...புது சபதங்கள்.

                புது வருசம்னாலே  நிறைய தீர்மானங்கள் எடுத்துக்கனும்ங்ற சம்பிரதாயத்த யாரு உருவாக்குனதுனு தெரில..வருசாவருசம் புதுப்புது தீர்மா...