ஞாயிறு, 21 அக்டோபர், 2018

மனம்...சொல்...செயல்...ஸ்மார்ட்வொர்க்...

ஸ்மார்ட்வொர்க்


                                இடியாப்பச் சிக்கல் மாதிரி உணர்வுச் சிக்கல்ல சிக்காத ஆளே இல்ல இந்த உலகத்துல.  அம்பியாவும், ரெமோவாவும் அந்நியனாவும் நமக்குள்ள ஏகப்பட்ட காட்சிகள்...விடாம ஓடிட்டே இருக்கு..நாமளும்  மாரி மாரி  அந்த அந்த கேரக்டருக்கு உயிர் குடுத்து குடுத்து, சீக்கிரமே டயர்டாகிற்றோம்.

                               உடம்ப விட மனசு சீக்கிரமே களச்சுப் போறதுனால, எதப் பாத்தாலும் எரிச்சல்..ஒரு வெறுமை...ஒருவித சலிப்பு...ஒரு மந்த தன்மை...நம்மள  தொரத்துது... இதுல இருந்தெல்லாம் விடுபடனும்னு தான் நாமளும் ஆசபடுறோம்...பட்.. ஆசபடுறதோடயே நிறுத்திக்குறோம்..... மாயமந்திரத்துல யாராது சரி பண்ணிக்  குடுத்தா நமக்கு சந்தோசம்...ஆனா, அதுக்கான   முயற்சிகளோ, செயல்களோ நாம செய்யமாட்டோம். அந்த அளவுக்கு சோம்பேறிகளாகிட்டோம் .
                               இதெல்லாம் பத்தாதுனு, கோவம், பொறாம, அழுகை, சோகம்,  அப்பிடியிப்பிடினு ஏகப்பட்ட எதிர்மறை உணர்வுகளின் குவியலா வேற இருக்கோம்..இவ்வளவு குப்பைகள வச்ச்சுக்கிட்டு நம்மளால எப்பிடி நம்ம வாழ்க்கைல ஜெயிக்க முடியும்?
                              ஸ்மார்ட் வொர்க் பண்ணனும்னு நினைக்குறோம். நம்மளோட மனக்குப்பைகளை தூக்கியெறியுறதும் ஒரு ஸ்மார்ட் வொர்க் தான்னு புரியாம, பாரங்களைத் தூக்கிக்கிட்டே மலையேறுறோம். அதுனால தான் சீக்கிரமாவே களச்சும் போய்றோம்.
                               எதிர்மறை உணர்வுச் சிக்கல்ல இருந்து வெளியே வர்றதுக்கு நிறைய வழிகள்  இருக்கு....அதுல ஒரு வழியை இப்ப பாக்கலாம்..நம்ம மனசுல தோணுற எல்லாத்தையும் ஒரு காகிதத்துல  எழுதிறனும். உணர்வுகள பேப்பர்ல எழுத எழுத, நம்ம மனநிலைல கொஞ்ச கொஞ்சமா மாற்றங்கள் வர ஆரமிச்சுரும்...கடைசில எதிர்மறை எண்ணங்கள் ,கட்டெறும்பான கழுதை மாரி , இருக்குற இடம் தெரியாம காணாமாப் போயிரும்.
                             பொதுவா நம்ம  மனசுல வர்ற எண்ணங்கள், இந்த வழியா  வந்துட்டு அந்த வழியா உடனே போயிரும். ஆனா, நாம தான் அத போகவிடாம,  விடாப்பிடியா பிடிச்சு தொங்கிக்கிட்டு இருப்போம். கடந்து போற இரயிலுக்கு டாட்டா காட்ற மாதிரி, எண்ணங்களையும், கடந்து போகவிட்டுட்டா , எந்த உணர்வுகளுமே  நம்மள பெருசா பாதிக்காது..அடுத்து என்னனு சிந்திக்க மனசு தயாராகிரும். எண்ணங்கள்  பின்னாடி போறதுனால தான் நம்ம மனசு எப்பப் பாத்தாலும் தம் பிரியாணி மாரி சூடாவே இருக்கு...
                             அடுத்து  சுயப்பேச்சு....  இந்த முறையிலயும் , நம்ம மனசுக்கு கடிவாளம் போடலாம்..அது எப்படினா , எப்பலாம் நமக்கு மனசோர்வு வருதோ ....எப்பலாம் எதிர்மறையா இருக்குறோமோ... எப்பலாம் சாஞ்சுக்க தோள் தேடுறோமோ... அப்பலாம் நம்மள நாமளே தட்டிக்குடுக்குற மாரி நமக்குள்ள பேசுனாப் போதும்.. நான் கண்டிப்பா ஜெயிப்பேன்...என்னால் முடியும்...என் வாழ்க்கைய நான்  உருவாக்குறேன்...என்னால எளிதா பணம் சம்பாதிக்கமுடியும். என் வாழ்க்கை  என் உரிமைனு நமக்கு நாமே உற்சாகமா பேசிக்கிட்டு இருந்தா போதும்...நம்ம வார்த்தைகள மனசு நம்ப ஆரமிச்சுரும்..பிறகு தான் நம்புறத அப்பிடியே உருவாக்கத் தொடங்கிரும்.. இந்த ஸ்மார்ட் வொர்க் நம்ம வேலைய பாதியா கொறச்சுரும்.
                 நம்ம மனம் சொல் செயல் மூன்றும் ஒரு நேர்க்கோட்டுல வந்துட்டா  வானத்த கூட விலை பேசலாம். சின்னச் சின்ன ஸ்டெப்ஸ் தான் நம்மள  மலை உச்சிக்கு கூட்டிக்கிட்டு போகும்..  சின்னச் சின்ன செயல்கள்  செய்யுறப்ப நமக்கு சலிப்பு வராது,,,மலைப்பு தோணாது..அதுக்கு பதிலா, மனசு மகிழ்ச்சியடையும்..சின்னச் சின்ன வெற்றிகள் நமக்கு  உற்சாகம் தரும்.. நம்மாளயும் முடியும்ங்ற நேர்மறை எண்ணம் நம்மள எப்பவும் புத்துணர்ச்சியோடயே வச்சிருக்கும்...இந்த மனநிலை நமக்கு வெற்றியை எளிதாக்கிரும். அதுனால சின்னச் சின்ன செயல்களை இன்னைக்கே செய்யத் தொடங்குவோம்...அர்த்தமுள்ள வாழ்வு வாழ்வோம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புது வருடம்...புது வசந்தம்...புது சபதங்கள்.

                புது வருசம்னாலே  நிறைய தீர்மானங்கள் எடுத்துக்கனும்ங்ற சம்பிரதாயத்த யாரு உருவாக்குனதுனு தெரில..வருசாவருசம் புதுப்புது தீர்மா...