சனி, 29 டிசம்பர், 2018

புதுசு கண்ணா புதுசு..

புதுசு கண்ணா புதுசு.....


விட்டா போதும்டா சாமினு தலை தெறிக்க, ஓட்டமா ஓடி டெட்லைன்ன தொட்டுருச்சு 2018.  இன்னும் ரெண்டு நாள் தான்.  வாசக் கதவத் தட்டிக்கிட்டே இருக்குற  2019  குத்தாட்டம் போட்டு வந்து உக்காந்துக்கும். புது வருசத்தன்னைக்கு சீக்கிரமே எந்திருச்சு, குளிச்சு, புது ட்ரெஸ் போட்டுக்கிட்டு கோயிலுக்குப்  போலாம்  வா... வா...னு  நம்ம கையப் பிடிச்சு இழுத்துட்டுப் போக ஒரு கூட்டம் தயாரா இருக்கும்.

             அன்னைக்கு, அத பண்ணிரணும்.... இதப் பண்ணிரணும் .... இனிமே இத பண்ணவே கூடாதுனு  ஒரு பெரிய பட்டியல கைல வச்சுக்கிட்டு இன்னொரு கூட்டம் ரெடியா  இருக்கும்.

                    இது எதுவுமே வேண்டாம்டா ....டிவில உலகத் தமிழர்களுக்காகப்  போடுற புத்தம் புது திரைப்படத்த நிம்மதியா , வீட்டுல உக்காந்துகிட்டு,கால் ஆட்டீக்கிட்டே, வச்சக் கண்ண எடுக்காம பாத்தே பொழுத ஓட்டுற கூட்டம் ஒரு பக்கம் டிவிகுள்ள  தொலைஞ்சு போக காத்துகிட்டு  இருக்கும்.

                  இது எதுக்குமே தொடர்பில்லாம ,அன்னைக்கு உழைச்சா தான்  சாப்பாடுனு ,வழக்கம் போல வாழக்கையோட ஓட்டத்துல ஓடிகிட்டு இருக்குற ஒரு கூட்டம் .  இப்பிடி  ஒவ்வொரு மனுசனும், ஒவ்வொரு விதத்தில இருந்தாலும்... புதுசுனா எல்லார் மனசுலயும் மத்தாப்பு வெடிக்கத் தான் செய்யுது.

                 புதுப் பொருள் எதுவானாலும் ஒரு நிமிடம் நம்ம மனசு மயங்கித்தான்  போகுது. புதுசு தர்ற போதைக்கு இணையா எதுவும் இல்ல. புது சட்டை, புது சேலை , புது செருப்பு, புது கம்மல், புது வண்டி, புது ஷூ , புது ஃபோன் , புது நட்பு.... இப்பிடி சொல்லிகிட்டே போலாம்.  பட்டியல் இமயமலை வரைக்கும் நீளும் புதுசு வந்ததும்  அட்டை மாதிரி நம்ம கூடவே ஒட்டிக்கிட்டு  இருந்த சலிப்பெல்லாம் ஓரமா ஒதுங்கி, அடையாளம்  தெரியாமா சின்னாபின்னாமாகிப் போயிரும்.  சின்னச் சின்ன சந்தோசங்கள்.. நம்ம வாழ்க்கைய கொண்டாட்டமாக்கிருது. இந்த புதுவருச கொண்டாட்டங்களும் அந்த பட்டியல்ல  களத்துல பட்டய கெளப்பிக்கிட்டு இருக்கு ஒவ்வொரு வருசமும்

               சமீப காலமா எல்லாராலயும் பெரிய எதிர்பார்ப்போடு, சாதி மத வேறுபாடு எதுவுமில்லாம , எல்லா மக்களுமே கொண்டாடுற இந்த ஆங்கில புத்தாண்டு மக்கள் மனசுல ஒரு பெரிய நம்பிக்கைய தருது.

            புது வருசத்துல சாதிச்சுருவோம்ங்க்ற நம்பிக்க தர்ற உத்வேகம் நம்ம உடம்புல புது ரத்தம் ஓடுற மாரி  இருக்கும். எதடா வெட்டுவோம் ,எதடா குத்துவோம்னு க்கேறின நரம்புகள் நம்மள தோள்பட்டையத் தூக்கிக்கிட்டு நடக்கச் சொல்லும்.  நாமளும் ஒரு நாலு நாளைக்கு நான் தான் ராஜாங்கற மாதிரி நெஞ்ச நிமித்திக்கிட்டு நடப்போம்..

அந்த திமிர்... அந்த கெத்து.... அந்த கான்பிடென்ஸ்...வேற லெவல்...

கொண்டாடுவோம்....ஆனந்தமா....மகிழ்ச்சியா... சந்தோசமா..

வாழ்க்கைய கொண்டாடி களிப்போம்...

புத்தாண்டு வாழ்த்துகள்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புது வருடம்...புது வசந்தம்...புது சபதங்கள்.

                புது வருசம்னாலே  நிறைய தீர்மானங்கள் எடுத்துக்கனும்ங்ற சம்பிரதாயத்த யாரு உருவாக்குனதுனு தெரில..வருசாவருசம் புதுப்புது தீர்மா...