ஞாயிறு, 9 டிசம்பர், 2018

இலவசமாய் சில இலவசங்கள்



                                        ஒருத்தர் கிட்ட நமக்கு ஒரு வேலை ஆகணும்னா என்ன செய்வோம்?.. ரெண்டு தடவ கேட்டு பாப்போம். கேக்கலைனா நீ செஞ்சு குடுத்தா நான் உனக்கு இத செய்யுறேன்னு ஆச  காட்டி பேரம் பேசுவோம். அதே மாரி தான் நாம சின்னப்புள்ளையா இருக்குறப்ப நம்ம அம்மா கடைல இருந்து இத வாங்கிட்டு வந்தா உனக்கு இது தருவேண்னு சொல்லிச் சொல்லியே நம்ம கிட்ட வேலை வாங்க்கிருப்பாங்க. நாமளும் அவங்க குடுக்குற சாக்லேட் இல்ல ஐஸ்கிரிம் திங்குற ஆசைல சொன்ன வேலைய  செஞ்சு குடுத்துருப்போம்.

                                 கொஞ்சம் பெருசா ஆனப்பெறகு ஸ்கூல்ல் ஹோம்வொர்க் எழுதிக்குடுக்குறதுக்குன்னு சில பசங்க இருப்பாங்க... அவிங்களுக்கு வேணுங்க்ற தீனி குடுத்தா போதும் பரிச்சய கூட  நமக்காக அவிங்களே எழுதிருவாய்ங்க...

                         அப்பிடியே ஸ்கூல முடிச்சிட்டு காலேஜ்க்கு போனா அங்க நோட்ஸ் எழுதுறதுக்கு, நம்ம கூட சேந்து வீட்ல பொய் சொல்லி காசு ஆட்டய போடுறதுக்கு, நாம விரும்புற பொண்னுகிட்ட நம்ம லவ்லெட்டரக் கொண்டு போய் குடுக்குறதுக்குனு ஒரு ஆளு நம்ம கூடவே இருப்பான்.. அவிங்கள, நாய்க்கு பிஸ்கட் போடுற மாரி அப்பப்ப கொஞ்சம் கவனிச்சா போதும்.
நம்ம முதுகு தப்பிச்சிரும்.

                     இலவசம்னாலே எனக்கு ஒண்ணு எங்க அப்பாக்கு ஒண்ணுனு கேக்குற காலத்துல தான் இருக்கோம். நோகாம நொங்கு உரிக்கனும். கஷ்டப்படாம எல்லாமே வேணும் நெனைக்குற மக்கள் அதிகரிச்சுக்கிட்டே இருக்காங்க இப்ப.

            இப்பிடி நம்ம வேல  ஆகணும்னா ஏதாவது ஒரு பொருள இலவசம்ங்ற பேருல லஞ்சமா குடுக்குறது காலகாலாமா நடந்துக்கிட்டு இருக்குற விசயம் தான். இருந்தாலும் , இன்னிக்கு நெலமைல இந்த இலவசம், மக்கள எந்த அளவுக்கு கெடுத்து வச்சிருக்குன்ன்னா மனிதன் சுயமா சிந்திக்கிறத கூட மறந்துட்டு இலவசங்கள் பின்னால போக ஆரமிச்சுட்டான்.

                             இலவசங்கள காட்டிக்  காட்டியே மனுசன  நாய்குட்டியாக்கிருச்சு இந்த உலகம். தனக்கு அந்தப் பொருள் தேவையா இல்லயானுலாம் யோசிக்கவே விடுறதில்ல. ஒண்ணுக்கு ஒண்ணு இலவசம், மூணு சட்டை வாங்குனா ஒண்ணு ஃப்ரீனு மனுசன் தலைல கட்டிர்றாங்க. சிலசமயம் நாலுக்கு ஒண்ணு சொத்தையா போய்ருது..அப்ப கூட , கஷ்டப்பட்டு உழைச்ச  காசு வீணாப் போகுதேனு நெனைக்காம நாலுல ஒண்ணு தான போச்சு.. போனாப் போகுதுனு நமக்கு  நாமளே சமாதனமும் சொல்லிக்குற அளவுக்கு மக்கள் இலவசங்களுக்கு  மனதளவுல அடிமையாகிட்டாங்க.

                      மனுசனோட சிந்தனைகள் நுகர்வு கலாச்சாரத்துக்கு அடிமையாகிருச்சு...தேவையோ தேவையில்லயோ...தான் அந்தப் பொருள வாங்கிரணும். பொருட்காட்சில  அழகா காய் வெட்டிக்குடுக்குற சின்ன மிசின ஆசப்பட்டு வாங்கிட்டு வந்துருப்போம்.வீட்டுல வச்சு நாம ட்ரை பண்றப்ப அது நமக்கு பெப்பே காட்டிட்டு மூலைல போய் உக்காந்துருக்கும். அடுத்த  பொருட்காட்சிக்குப் போய், அதயே திரும்ப வாங்கிட்டு வந்துருப்போம்.

                 அதே மாரி தான் டிசைன் செருப்பும்...பாக்குறதுக்கு நல்ல பளபளனு இருக்கும்..அழகா இருக்கேனு வாங்கிட்டு வந்த நாலு நாள்ல பல்ல காட்டிரும் அந்த செருப்பு. அப்பவும் அந்த ஆச விடுதானு பாத்தா..இல்ல.. திரும்பவும் அதே மாரி அழக பாத்து வாங்கிட்டு வருவோம். செருப்போட உழைப்ப பாக்காம அழக பாத்து வாங்குற பழக்கம் எங்க இருந்து வந்துச்சு?

                  இப்ப கொஞ்ச நாளா ஆன்லைன்ல பொருள்கள் வாங்குற பழக்கம் நாளுக்கு நாள் கூடிக்கிட்டே வருது...மொதலாம் தீபாவளி, பிறந்தநாள்னா தான் வீட்டுல  புது துணி வாங்குவாங்க.. இந்த ஆன்லை கலாச்சாரம் வந்த பெறகு, வருசம் முழுசும் வாங்கிட்டே இருக்கோம். தேவையோ இல்லயோ ஒரு ஆஃபர் போட்டா வாங்கிரனு நமக்கு...அந்த அளவுக்கு நுகர்வு கலாச்சாரம் அடிமையாக்கிருச்சு.

          ஒரு ஆஃபரோ இல்ல இலவசமோ எப்பிடி குடுக்க முடியுதுனு கொஞ்சம் யோசிச்சா நாம இந்த அளவுக்கு அடிமையாகிருக்க மாட்டோம். நுகர் பொருள்களின் மேல இருக்குற இந்த அடிமைத் தனத்துனால நம்மளுக்கு எதுலயுமே திருப்தி கெடைக்கவே மாட்டேங்குது.. இன்னும் இன்னும்னு நம்ம மனசு நிலையில்லாம தவிக்குது... நம்ம மனசுக்கு தீனி போட்டு தீனி போட்டு கட்டுப்படியாகாத ஒரு நெலைம வர்றப்ப நம்மள மாத்திக்கவே முடியாது..வாழ்க்கை வெறுமையாகிரும்..இது என்ன வாழ்க்கைனு தோண ஆரமிச்சுரும்..

                சோ, நம்ம சிந்திக்கும் திறன கொஞ்சம் தூசி தட்டி மனசுக்கு ஒரு கடிவாளம் போட்டா போதும் .. நம்ம வாழ்க்கைல  சலிப்பு என்னைக்குமே எட்டிப்பாக்காது. நம்ம பர்ஸ்ஸும் பத்திரமா இருக்கும். டைம்மும் வேஸ்ட் ஆகாது. சிந்திப்போம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புது வருடம்...புது வசந்தம்...புது சபதங்கள்.

                புது வருசம்னாலே  நிறைய தீர்மானங்கள் எடுத்துக்கனும்ங்ற சம்பிரதாயத்த யாரு உருவாக்குனதுனு தெரில..வருசாவருசம் புதுப்புது தீர்மா...