வெள்ளி, 7 டிசம்பர், 2018

பணம் என்னும் மந்திரவாதி.

                                           பணம் ..

                   தொவண்டு கிடக்குற  நம்ம வாழ்க்கைய ஒளிமயமா ஆக்குற ஒரு மந்திரவாதி எதுனு பாத்தா  இந்தப் பணம் தான். நம்ம மொபைலத் தவிர, நம்ம கூடவே இருக்கனும்னு   இந்த உலகமே விரும்புற ஒரே பொருள் இது தான். வர்க்கபேதம், நிற பேதம் , மேலை நாடு, கீழை நாடுனு எந்த வித்தியாசமுமில்லாம ஏழை பணக்காரன்னு எல்லா மக்களும் தேடி ஓடுறது பணத்த நோக்கி தான்.  எனக்கு பணம் வேண்டாம்னு சொல்ற ஆளு யாருமே இல்ல. அப்பிடி யாராது சொல்றாங்கன்னா அவங்க பொய் சொல்றாங்கன்னு தான் அர்த்தம்.

               எல்லாரும் விரும்புற  இந்தப் பணத்தை  அதிகமா வச்சுருக்கவங்களப் பாத்தா எல்லாருக்கும் ஒரு கடுப்பு , ஒரு பொறாமை வரத்தான் செய்யுது. இந்தக் கடுப்பு தான் நிறைய எதிர்மறையான கருத்துக்கள உருவாக்குது.... பணக்காரன்னா நேர்வழில சம்பாதிச்சுருக்க மாட்டான்னு நூத்துக்கு தொண்ணூறு சதவீதம் நம்புறோம்.. பணம் இருக்குறவன் சாதாரணமா எது செஞ்சாலும் பணத்திமிருனு ரொம்ப ஈசியா பேசிருவோம்...பணம்  இருக்குற இடத்துல குணம் இருக்காது.. அவன்கிட்ட பணம் இருக்குல... செஞ்சா என்னனு வாய் கூசாம கேப்போம்... என்னமோ பணம் அவன் வீட்டுத் தோட்டத்துல காய்க்கிற மாரி.
                       பணத்து மேல விருப்பம் இருக்குற அளவுக்கு அதை சம்பாதிக்க முயற்சி செய்யூறோமானா இல்ல.. விடாமுயற்சி செய்ய விரும்பாத நாம, கடின உழைப்பால பணம்  சம்பாதிக்குறவங்கள் குறை சொல்றதுக்கு மட்டும் தயங்குறதே இல்ல..

                   அந்தப் பணத்த சம்பாதிக்க  ஒவ்வொருத்தனும் எவ்வளவு நாயா பேயா அலயுறான்.  நாம என்ன செஞ்சிக்கிட்டு இருக்கோம்னு  யோசிக்குறதில்ல நாம..அவன் ஆரம்பகட்டத்துல தூக்கத்த கண்டிப்பா தியாகம் செஞ்சிருப்பான்..வீட்டுல நடக்குற நல்லது கெட்டதுக்கு வந்து போயிருக்கமாட்டான்.. குடும்பத்தோட உக்காந்து பேசி சிரிச்சிருக்க மாட்டான்..
சமயத்துல அவன் பிள்ளைக மூஞ்சையே அவன் பாத்து ரொம்ப நாளாயிருக்கும்... விதை போட்டு அத பாத்து பாத்து வளக்குற,  தோட்டக்காரன் மாரி அவனோட தொழிலையோ, இல்ல , பாக்குற வேலையையோ பாத்து பாத்து  வளத்ததுனால தான் இன்னைக்கி அவன் பெரிய மரமா நிக்க முடியுது

                        அப்பிடி ஓடி ஓடி அவன் எதுக்கு இப்பிடி சம்பாதிக்கனும்? பந்த பாசத்த விட பணம் தான் பெருசாப் போச்சா? னு அறிவாளிமாரி கேள்வி கேக்குறதுக்கு  முன்னாடி, ஒரு குடும்பத்த நல்லபடியா கொண்டு போறதுக்கும், புள்ளகுட்டிக விரும்புனத  படிக்க வைக்கிறதுக்கும்  அவங்களுக்கு வேணும்ங்க்றத  வாங்கிக் குடுக்குறதுக்கும்   பணம் எவ்வளவு முக்கியம்னு தெரிஞ்சிருக்கும்.  இருந்தாலும் நாம பணக்காரன கொறை சொல்லிக்கிட்டே தான் இருப்போம்.

                     என்கிட்ட  பணம்லாம்  இல்லைனு சின்ன வருத்தம் கூ ட இல்லாம நம்மளா  சொல்ல முடியுமா? முடியாதுல....ஏன்னா நமக்கும் பணம் முக்கியம்... ஆனா நான அத வெளிப்படுத்துறதில்ல.. பணம் வேண்டாம்னு சொல்றவங்க ,இனாமா ஒரு பத்தாயிரம் தேடி வந்தா வேண்டாம்னு முகத்த திருப்பிக்குவாங்களா?  மாட்டாங்க... அதான் பணத்தோட கெத்து..தன்ன வேணாம் வேணாம்னு சொல்றவனையே  விரும்ப வச்சிரும் பணம்..

                பணம் இருக்குறவன்லாம் கெட்டவன்ங்க்ற அபிப்பிராயம் எப்பிடிதான் வந்துச்சோ தெரில..  பணம் இருந்தா  மத்தவங்களுக்கு உதவி செய்யமுடியும்  யார் கையையும் எதிர்பாத்துருக்க வேண்டியதில்ல. பணம் இல்லாம  நியாயமான ஆசைகளகூட  அடைய முடியாம  போறப்ப தான் நம்ம மேல நமக்கே  வெறுப்பு வந்துரும்.  நம்மளோட ஆசைகள நிறைவேத்திக்குறப்பதான்  நமக்கே நம்ம மேல நல்ல மரியாதை வரும். சுயமதிப்பு கூடுது. நம்மளால முடியும்ங்ற  தன்னம்பிக்கை வருது.  தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தாப் போதும். நம்ம இலக்குகள ஈசியா அடஞ்சிரலாம்.
                      பணம் ஒரு நல்ல உற்சாகமூட்டி.. அது நம் கைக்கு வந்ததுமே, இல்ல  அத கண்ணால பாத்ததுமே நம்ம பேச்ச நம்ம மனசே கேக்காது... றெக்க கட்டி பறக்க ஆரமிச்சுரும்.  இந்த உலகத்தையே  விலை பேசிரலாமானுகூட தோணும்.. உற்சாகமான மனசோட எது செஞ்சாலும் அது சிறப்பா அமையும்..நாம் ஒரு ஸ்டெப் பணத்த நோக்கி எடுத்து வச்சோம்னா , பணம் நம்மள நோக்கி ரெண்டு ஸ்டெப் முன்னாடி வரும்... வேணுமன்னா ஒரு தடவ முயற்சி செஞ்சுதான் பாருங்களேன்..
                இவ்வளவும் தெரிஞ்சுகிட்டும், போதுங்குற மனசே  பொன் செய்யும் மருந்துனு பழச பிடிச்சு தொங்கிக்கிட்டு இருக்காம,   இன்னும் கொஞ்சம் வேணும்னு நெனச்சு பணத்த நல்ல வழில  சம்பாதிக்க வழி என்னனு பாக்க ஆரம்பிப்போம்.. சம்பாதிச்சத சரியான முறைல சேமிச்சு வைக்குறது கூட ஒரு வகையான வருமானம் தான்..இரண்டாவது ஒரு வருமானம் வர்ற மாரி ஏற்பாடு செஞ்சுக்குறது  நம்ம கடைசி காலத்த நிம்மதியா திருப்தியா வாழ் உதவும். இல்லனா ,காலம் முழுவதும்  ஓடிக்கிட்டே இருக்க வேண்டியாதாகிரும்.
                பணம்  நல்ல விசயம் தான்..எல்லாருக்குமே அதை அடைய அனுபவிக்க உரிமை இருக்கு...நம் விருப்பங்கள அடைறது, மகிழ்ச்சியான் வாழ்க்கை வாழுறது, நாலு பேருக்கு உதவிகரமா இருக்குறதெல்லாமே நம்மளோட பிறப்புரிமை...நம்ம உரிமையை மீட்போம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புது வருடம்...புது வசந்தம்...புது சபதங்கள்.

                புது வருசம்னாலே  நிறைய தீர்மானங்கள் எடுத்துக்கனும்ங்ற சம்பிரதாயத்த யாரு உருவாக்குனதுனு தெரில..வருசாவருசம் புதுப்புது தீர்மா...