ஞாயிறு, 2 டிசம்பர், 2018

வாழ்த்துவோம்....வளருவோம்...


வாங்க வளரலாம்




                                  வார்த்தைகள்  மொழிக்கு எவ்வளவு முக்கியமானதோ அதே மாரி மனுசனோட வளர்ச்சிக்கும் ரொம்ப ரொம்ப முக்கியமானது.. மனுசனோட வாழ்க்கைல சொற்களோட பங்கு மிகப் பெருசு. ஒருத்தங்க யூஸ் பண்ற வார்த்தைகள வச்சே சமயங்கள்ல, அவுங்கள ஈசியா எடை போட்றலாம்.  அவுங்க மூட் எப்பிடி இருக்குனும் சொல்லிறலாம். அவ்வளவு சக்தி வாய்ந்தது வார்த்தைகள்.

                           பண்பட்ட ,நாகரீகமான மனுசங்க நல்ல  உயர்ந்த சொற்களையே சொல்லுறத நாம பாத்துருப்போம். காயப்படுத்தாத வார்த்தைகள் மட்டுமில்லை உயர்வைத்   தரக்கூடிய வார்த்தைகளையும் ,ஒவ்வொரு மனுசனும் பேசக் கத்துக்கனும். காயப்படுத்தக்கூடிய,காயப்படுத்துன வார்த்தைகள் ஜென்ம ஜென்மத்துக்கும் நினைவ விட்டு போகாது. அதுனால பேசுற வார்த்தைகள்ல கவனமா இருக்கனும்.

                குறைகள் சொல்ல, காயப்படுத்த மட்டும் இல்ல  ஒரு மனுசன வளர்த்துவிடுவதும் வார்த்தைகள் தான். மத்தவங்கள நாம் வாழ்த்துற ஒவ்வொரு முறையும் நாமும் ஒரு அடி முன்னாடி போகிறோம்.  நம் வாழ்க்கையில. நாம பேசுற வார்த்தைகள் கேட்டு, வானத்துல இருக்குற தேவர்கள் 'ததாஸ்து'னு சொல்லுறதா பெரியவங்க சொல்லுவாங்க.. .அப்பிடினா என்ன அர்த்தம்னா,  'அப்பிடியே ஆகட்டும்.. அதுனால நல்ல வார்த்தைகளையே பேசனும்னு சொல்லுவாங்க...

                           தேவர்க்ள் ததாஸ்துனு சொல்லுறாங்களா இல்லையானு எனக்குத் தெரியாது. ஆனா, மனுச மனசுக்கு ஒரு தன்மை இருக்கும். நல்ல விசயம் பேசுறப்ப, நல்ல வார்த்தைகள பேசுறப்ப, கேக்குறப்ப மகிழ்ச்சியடையுறது தான் அது.. யாராது நம்மள பாராட்டிட்டா நம்மள கைல பிடிக்கவே முடியாது. மகிழ்ச்சியா இருக்குற மனசு யாருக்கும் கெடுதல் நெனைக்காது.   சந்தோசமா இருக்குறப்ப நம்மளால தெளிவா சிந்தித்து செயல்பட முடியும்.அதுனால நம்ம குறிக்கோள ஈசியா அடைய முடியுது...

                நாம கேக்குற வார்த்தைகளுக்கே இவ்வளவு சக்தி இருக்குறப்ப, அந்த வார்த்தைகள நாம பேசுறப்ப எவ்வளவு நல்லது நடக்கும். மத்தவங்கள நாம வாழ்த்த வாழ்த்த, நம்ம எண்ணங்கள் யாவும் அப்பிடியே  நடக்கும்...நம்ம லட்சியங்கள, குறிக்கோள்கள, ஆசைகள எளிதா அடைய முடியும். அதுமட்டுமில்ல, நம்மளோட சந்தோசம் மத்தவங்களுக்கும் அப்பிடியே பத்திக்கும். நாம இருக்குற இடம், நம்மள சுத்தி இருக்குற எல்லாரும் மகிழ்ச்சியா இருந்தா எவ்வளவு நல்லாருக்கும்... எவ்வளவு உற்சாகமா, ஒரு உத்வேகத்தோட நம்மாளல  அலுவலகத்துலயும் தொழில்லையும் ஈடுபாட்டோடு உழைக்க முடியும்..எவ்வளவு பொருளாதார முன்னேற்றம் நடக்கும்... நெனைச்சாலே ,சந்தோசமா இருக்குல. புது ரத்தம் உடம்புல ஓடுற மாரி இருக்குல...
 நாம் சாதாரணமா நெனைச்சுக்கிட்டு இருக்குற வார்த்தைகள் நம்ம வாழ்க்கைல  எவ்வளவு பெரிய ஒரு மாயாஜாலத்தையே நடத்திக்காட்டுது பாத்தீங்களா. அப்பிடிப்பட்ட  நல்ல வார்த்தைகள  இந்த நொடிலருந்தே பேச ஆரம்பிப்போம்...நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமா முன்னேறுவோம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புது வருடம்...புது வசந்தம்...புது சபதங்கள்.

                புது வருசம்னாலே  நிறைய தீர்மானங்கள் எடுத்துக்கனும்ங்ற சம்பிரதாயத்த யாரு உருவாக்குனதுனு தெரில..வருசாவருசம் புதுப்புது தீர்மா...